32. | பலநதிகள் புணர்ந்தநதி பதியையணை யாதவைகைக் | குலநதித்தண் டுறைச்செல்வி பேரைச்சொல்லாய் பாடநான். | |
33. | அன்பாண்டு கல்வலிதென் றவ்வைபா டியவெங்கள் | தென்பாண்டி நாட்டாடன் பேரைச்சொல்லாய் பாடநான். | |
34. | பொன்மாடஞ் சூழ்ந்தகரும் புயலமலன் போர்வைநிகர் | பன்மாடக் கூடலாள் பேரைச்சொல்லாய் பாடநான். | |
35. | எண்டிசைக்கும் வேம்பாயெம் மிறையவர்க்குக் கரும்பாகும் | வண்டிசைக்குந் தாரினாள் பேரைச்சொல்லாய் பாடநான். | |
36. | தினவட்ட மிடும்பருதித் திண்பரிமண் பரியாக்கும் | கனவட்ட வாம்பரியாள் பேரைச்சொல்லாய் பாடநான். | |
37. | திக்கயங்கள் புறங்கொடுப்பத் திசையெட்டுந் திறைகொண்ட | கைக்கயத்தை மேற்கொண்டாள் பேரைச்சொல்லாய் பாடநான். | |
38. | ஆனேற்றுங் கொடியானை யைங்கணையான் வென்றிடவம் | மீனேற்றின் கொடியுயர்த்தாள் பேரைச்சொல்லாய் பாடநான். | |
39. | இனியாணை யிலையரசர்க் கென்றுதிசை யெட்டுமொரு | தனியாணை செலுத்தினாள் பேரைச்சொல்லாய் பாடநான். | |
32. நதிபதி - கடல். திருவாதவூரடிகள் புராணமுடையாரும், பரஞ்சோதி முனிவரும் வையைநதி கடலொடு கலக்கவில்லை யென்று கூறுவர். அது பாம்பாற்றுக் காலோடு கலந்து கடலிற் புக்கதென்று தக்கயாகப்பரணி, 212-ஆந் தாழிசை உரையில் அவ்வுரையாசிரியர் எழுதுவர்.
33. அன்பு ஆண்டு - அன்பை மேற்கொண்டு. கல் வலி தென்று ஒளவை பாடிய பகுதி, “பஞ்சவன்றன், நான்மாடக் கூடலிற் கல்வலிது” (தனிப்.) என்பது. 34. போர்வை - யானைத்தோலாகிய போர்வை. 35. இறையவர் விரும்புதலால் வேம்பைக் கரும்பாகுமென்றாள். 36. கனவட்டமென்பது பாண்டிய அரசர்க்குரிய குதிரை. அது தன் கால்தூளியால் சூரியனுடைய குதிரையாகிய விண்பரியை மூடி மண்பரியாகச் செய்யும். 37. கைக்கயம் - துதிக்கையையுடைய யானை. 38. ஐங்கணையான் - காமன்.
|