கட்டளைக் கலித்துறை 10. | வன்னஞ் செறிவளைக் கைச்சிற காற்றன் வயிற்றினுள்வைத் | தின்னஞ் சராசர வீர்ங்குஞ் சணைத்திரை தேர்ந்தருத்திப் | பொன்னம் பலத்துளொ ரானந்த வாரிபுக் காடும்பச்சை | அன்னம் பயந்தன கொல்லாம்பல்லாயிர வண்டமுமே. | | | |
நேரிசை வெண்பா 11. | அண்டந் திருமேனி யம்பலத்தார்க் கென்பதுரை | கொண்டங் குணர்தல் குறைபாடே - கண்டளவில் | விண்ணம் பொலிந்ததொரு மின்கொடியே சொல்லாதோ | வண்ணம் பொலிந்திருந்த வா. | | | |
கட்டளைக் கலித்துறை 12. | வாய்ந்தது நின்மனை வாழ்க்கையென் றேதில்லை வாணரம்மே | காய்ந்தது வென்றிவிற் காமனை யேமுடிக் கங்கையைப்பின் | வேய்ந்தது பாவநின் மென்பதந் தாக்கவவ் வெண்மதியும் | தேய்ந்தது பெண்மதி யென்படு மோவச் சிறுநுதற்கே. | | | |
நேரிசை வெண்பா 13. | சிறைசெய்த தூநீர்த் திருத்தில்லைத் தொல்லை | மறைசெய்த வீர்ந்தண் மழலைப் - பிறைசெய்த | ஒண்ணுதலைக் கண்ணுதலோ டுள்ளத் திருத்தியின்பம் | நண்ணுதலைக் கண்ணுதலே நன்று. | | | |
10.ஆனந்தவாரி - ஆனந்தக்கடல். அம்பிகையை அன்னப் பறவையாக உருவகஞ் செய்தார். வளையையுடைய கைகளாகிய சிறகால். சராசரமாகிய குஞ்சு, ஈர்ங் குஞ்சு - பச்சைக்குஞ்சு. அண்டம் - உலகம், முட்டை: சிலேடை.
11. சிவபெருமானுக்கு ஆகாயம் திருமேனியென்று வாயினாற் கூறுதல் குறைபாடுடையது; வானத்தில் தோன்றும் மின் கொடியே இறைவனது திருவுருவத்தை நினைவுறுத்தும். வானத்தை அவர் திருமேனியாகவும் அதன்கண் தோன்றும் மின்னலை உமாதேவியாராகவும் நினைந்து இங்ஙனம் கூறினார்.
12. நின் மனை வாழ்க்கை வாய்ந்தது என்ற தைரியத்தால் காமனைக் காய்ந்தார். சிறுநுதற்குப் பெண்மதி என்படுமோ; சிறு நுதற்கு - கங்கைக்கு; பெண்மதி என்படுமோ; முடித்த பிறை தேய்ந்தது போலக் கங்கையின் மதியும் தேயுமென்றபடி.
13. சிறைசெய்த நீர்த்தில்லை; “சிறைவான் புனற்றில்லை” (திருச்சிற்.); சிறை - அணை. மறையையுண்டாக்கிய. ஒண்ணுதல் - சிவகாமவல்லி. கண்ணுதலோடு - நடராசப் பெருமானோடு. கண்ணுதலே நன்று - நினைத்தலே நன்மையாகும்.
|