| தண்ணளிக் கமலஞ் சிவப்பூற வம்மையொரு | | சப்பாணி கொட்டியருளே | | தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி | | |
38. | சேலாட்டு வாட்கட் கருங்கடற் கடைமடை | | திறந்தமுத மூற்றுகருணைத் | | தெண்டிரை கொழித்தெறிய வெண்டிரை நெருப்பூட்டு | | தெய்வக் குழந்தையைச் செங் |
| கோலாட்டு நின்சிறு கணைக்காற் கிடத்திக் | | குளிப்பாட்டி யுச்சிமுச்சிக் | | குஞ்சிக்கு நெய்போற்றி வெண்காப்பு மிட்டுவளர் | | கொங்கையிற் சங்குவாக்கும் |
| பாலாட்டி வாயிதழ் நெரித்தூட்டி யுடலிற் | | பசுஞ்சுண்ண முந்திமிர்ந்து | | பைம்பொற் குறங்கினிற் கண்வளர்த் திச்சிறிய | | பருமணித் தொட்டிலேற்றித் |
(3-4) குழவி நீ பருகிடத் தேறல் ஊறு கைக்கமலம்.
(முடிபு.) விமானமும் வீடும் காடும் நாடும் பீடமும் கட்டிலும் தொட்டிலாக ஆடும் குழவிநீ கொட்டியருள்.
38. இதில், உக்கிரகுமார பாண்டியரை அம்பிகை வளர்த்த முறை கூறப்படும்.
(அடி, 1) வெண்டிரை - கடல். தெய்வக் குழந்தை - உக்கிர குமார பாண்டியர். அவர் கடல் சுவற வேலெறிந்த வரலாற்றை நினைந்து இங்ஙனம் கூறினார்.
(2) கோல் - திரட்சி. கோல் - அம்பு; இங்கே ஆகு பெயராய் அம்பறாத்தூணியைக் குறிப்பதெனக் கொள்ளலுமாம். உச்சி - உச்சந்தலை. முச்சி- உச்சிக்கொண்டை. குஞ்சி - ஆண் தலைமயிர். (பி-ம்.) ‘முச்சியுச்சி’; ‘நெய் பொத்தி’. வெண் காப்பு - திருநீறு.
(2-3) கொங்கையிற் பால், சங்கு வாக்கும் பால். ஆட்டி - அசைத்து. குழந்தைக்குப் பாலூட்டுவார் அதனை அசைத்துக் கலக்கி யூட்டுதல் வழக்கம். வாயிதழ் நெரித்தூட்டல்: “நெய்பாலடைக்கலந் தாய்வைத்து வாய்நெரித் தூட்ட வழுமையனே” (திருவரங்கத்தந். 18.) திமிர்ந்து - பூசி. (பி -ம்.) ‘பரூஉமணித்’.
|