பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்63

5. முத்தப் பருவம்

ஆசிரிய விருத்தம்
44.
காலத் தொடுகற் பனைகடந்த
   கருவூ லத்துப் பழம்பாடற்
கலைமாச் செல்வர் தேடிவைத்த
   கடவுண் மணியே யுயிரால

வாலத் துணர்வு நீர்பாய்ச்சி
   வளர்ப்பார்க் கொளிபூத் தளிபழுத்த
மலர்க்கற் பகமே யெழுதாச்சொல்
   மழலை ததும்பு பசுங்குதலைச்

சோலைக் கிளியே யுயிர்த்துணையாம்
   தோன்றாத் துணைக்கோர் துணையாகித்
துவாத சாந்தப் பெருவெளியிற்
   றுரியங் கடந்த பரநாத

மூலத் தலத்து முளைத்தமுழு
   முதலே மத்தந் தருகவே
முக்கட் சுடர்க்கு விருந்திடுமும்
   முலையாய் முத்தந் தருகவே.        
(1)

    44. (அடி, 1) கற்பனை - கற்பித்தல். கருவூலம் - பொக்கிஷம். (பி-ம்.) ‘கருகூலத்துப்’. பழம்பாடல் - வேதம். செல்வர் - ஞானியர். தேடி வைத்த - அறிந்து வைத்த, கருவூலத்தில் வைத்த மணி.

    (1-2) ஆலவாலம் - பாத்தி. உணர்வு - மெய்ஞ்ஞானம். (பி-ம்.) ‘உணர்வன்னீர்’; ‘அருள்பழுத்த’. தேவியைக் கற்பகமென்று உருவகித்தற்கேற்ப்ப் பாத்தியும் நீர்பாய்ச்சலும் பூத்தலும் பழுத்தலும் கூறப்பட்டன. குதலை - எழுத்து வடிவம் பெறாத சொல்.

    (3) தோன்றாத்துணை - இறைவன்; “தோன்றாத் துணையாயிருந்தனன் றன்னடி யோங்களுக்கே” (தே.)

    (4) முக்கட்சுடர் - சிவபெருமானுடைய கண்களாகிய மூன்று சுடர்கள்; சோம சூரியாக்கினிகள் (63.)