பக்கம் எண் :

64குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

45.
உருகி யுருகி நெக்குநெக்குள்
   உடைந்து கசிந்திட் டசும்பூறும்
உழுவ ளன்பிற் பழவடியார்
   உள்ளத் தடத்தி லூற்றெடுத்துப்

பெருகு பரமா னந்தவெள்ளப்
   பெருக்கே சிறியேம் பெற்றபெரும்
பேறே யூறு நறைக்கூந்தற்
   பிடியே கொடுநுண் ணுசுப்பொசிய

வருகுங் குனக்குன் றிரண்டேந்தும்
   மலர்ப்பூங் கொம்பே தீங்குழலின்
மதுரங் கனிந்த பசுங்குதலை
   மழலை யரும்பச் சேதாம்பல்

முருகு விரியுஞ் செங்கனிவாய்
   முத்தந் தருக முத்தமே
முக்கட் சுடர்க்கு விருந்திடுமும்
   முலையாய் முத்தத் தருகவே.    
(2)

46.
கொழுதி மதர்வண் டுழக்குகுழற்
   கோதைக் குடைந்த கொண்டலுநின்
குதலைக் கிளிமென் மொழிக்குடைந்த
   குறுங்கட் கரும்புங் கூன்பிறைக்கோ

    45. (அடி, 1) நெக்கு நெக்கு - நெகிழ்ந்து நெகிழ்ந்து. உள் உடைந்து - உள்ளம் உருகி. அசும்பு - துளி. உழுவல் அன்பு - ஏழு பிறப்பும் தொடர்ந்த அன்பு; உழுவலன்பென்பதன் பொருளைப் பழவடியா ரென்பதனாலும் வற்புறுத்தினார். தனம் - தடாகம்.

    (2) (பி - ம்.) ‘பெருகும்’. ஊறும் நறை - ஊறுகின்ற தேன்; நறை - ஊறுகின்ற தேன்; நறை - நறுமணமுமாம். (பி-ம்.) ‘நாறுநறை’. பிடியின் தலைமயிரைக் கூந்தலென்பர். நூசுப்பு - இடை.

    (3) குங்குமக்குன்று இரண்டென்றது நகில்களை (59.) சேதாம்பல் - செவ்வாம்பலினது.

    (4) முருகு - நறுமணம்.

    46. மேகம் முதலியவை அம்பிகையின் கூந்தல் முதலியவற்றிற்குத் தோற்றனவாதலின் அவற்றில் உண்டாகும் முத்துக்கள் அம்பிகையின் திருவாய் முத்தை (முத்தத்தை) ஒவ்வாவென்பது கூறப்படும்.

    (அடி, 1) கொழுதி - கிண்டி. குழற்கோதை - சுருளுதலையுடைய கூந்தல். உடைந்த - தோற்ற. கொண்டல் - மேகம். குறுங்கண் - குறிய கணுக்கள்.