(1)
இது சென்ற சுக்கிலஹ வருஷம் மாசி மாதம் திருமயிலைச் சுப்பராய ஞானியாரால் பதிப்பிக்கப்பெற்ற பண்டாரமும்மணிக்கோவை அச்சுப் பிரதியிற் காணப்படுகின்றது.
(நேரிசை வெண்பா)
| வந்த வினையும் வருகின்ற வல்வினையும் |
| கந்தனென்று சொல்லக் கலங்குமே-செந்தினகர்ச் |
| சேவகா வென்று திருநீ றணிவார்க்கு |
| மேவ்வா ராதே வினை. |
(1)
இச் செய்யுள் கந்தர்கலிவெண்பா ஏட்டுப்பிரதி ஒன்றின் ஈற்றிலே காணப்பட்டது.
(நேரிசை வெண்பா)
| ஆட லறுபத்டு நாலுடையா ரம்புயப்பொன் |
| மேடையின்மே லேறி விளையாடும்-கூடல் |