(2)
இவையிரண்டும் திருநெல்வேலி அம்பலவாணக் கவிராயரவர்கள் வீட்டிற் கிடைத்த மதுரைக் கலம்பக ஏட்டுப் பிரதியிலே
இருந்தன.
(வஞ்சித்துறை)
| ஆறு முகவனை, நாறு மலர்கொடு |
| கூறு மடியவர், பேறு பெறுவரே. |
(1)
(குறள் வெண்செந்துறை)
| தவளத் தாமரைத் தாதார் கோயி |
| லவளைப் போற்றுது மருந்தமிழ் குறித்தே. |
(2)
(எழுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்)
| பவளமால் வரையி னிலவெறிப் பதுபோற் |
| பரந்தநீற் றழகுபச் சுடம்பிற் |
| றிவளமா துடனின் றாடிய பரமன் |
| சிறுவனைப் பாரதப் பெரும்போர் |
| தவளமா மருப்பொன் றொடித்தொரு கரத்திற் |
| றரித்துயர் கிரிப்புறத் தெழுதும் |
| கவளமால் களிற்றின் றிருமுகம் படைத்த |
| கடவுளை நினைந்துகை தொழுவாம்.* |
(3)
(கலிவிருத்தம்)
| ஆர ணத்தவன் மாலறி யாவருட் |
| பூர ணத்திரு ஞானம் பொலிந்திடக் |
| கார ணத்துமை யாள்தரு கைம்முக |
| வார ணத்திரு பாதம் வணங்குவாம். |
(4)
இவை நான்கும் கொங்குநாட்டிற் கிடைத்த மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் ஏட்டுப் பிரதிகள் சிலவற்றில் இருந்தன.
* | திருவாதவூரடிகள் புராணம், கடவுள் வாழ்த்து. |