18குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

சிறப்புப் பாயிரம்

பின்வரும் சிறப்புப் பாயிரச் செய்யுள், சென்ற நூற்றாண்டில் நீதிநெறி விளக்கத்தைப் பாளையங்கோட்டையிலிருந்த ஒரு பாதிரியார் பதிப்பித்த காலத்தில், அவர் விருப்பத்தின்படி அவருக்குத் தமிழ்ப்பாடஞ் சொல்லிவந்த தேவர்பிரான் கவிராயர் என்பவரால் இயற்றப்பெற்று அப்பதிப்பில் சேர்க்கப்பட்டதென்று குமரகுருபரசுவாமிகள் மரபிற் பிறந்த ஓருவரால் அறிந்தேன்.

(நிலைமண்டிலவாசிரியப்பா)
திருமக ளகலாப் பரமவை குந்த
நன்னக ருதித்த செந்நெறிக் குரிசில்
ஐந்தெனும் பருவம் வந்துறு மளவும்
மழக்குண மொருவி மிழற்றிடாச் செம்மல்
செந்திலம் பதிவாழ் கந்தன தருளால்
ஓதா துணர்ந்த போதனாய் முன்னர்க்
கலிவெண் பாவெனு மொலிபெறு மலங்கலக்
*குகன்றிரு முடிதனக் குகந்திடச் சூட்டிப்
பிள்ளைக் கவிமுதல் வெள்ளைக் கிழத்தி
மாலையீ றாகச் சால்பமை பிரபந்தம்
**முந்நான் கியற்றித் தன்னாஞ் சமய
நிலையையுங் காட்டி யுலைவிலா தியாரும
தீதெலா மொருவி நீதியே புரிய
நீதிநெறி விளக்கமென் றேதமில் பனுவலும்
இயற்றின னில்லறந் தியக்குறு நிலையென
இளமையிற் றுறந்து வளமைசேர் தருமை
மாசிலா மணியெனுந் தேசுறு குரவன்
பதமலர் பழுச்சுமற் புதகுண குமர
குருபர னெனும்பெயர் மருவிய முனியே
 
 * 
(பி-ம்.) ‘குகன்றிரு வடிதனக்’. 
 ** 
தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பில் இங்கே “முந்நான் கன்றியு மொழிதரு கைலைக், கலம்பகந் துண்டிக் களிற்றுப் பதிகம், அவ்விரண் டியற்றிச் சைவநற் சமய” என்னும் பகுதி காணப்படுகிறது.