(578)
என்பதில் வேற்றுமைத்தொகை என்பதை எடுத்தாண்டுள்ளார்;
| “ஒருவ ரென்ப துயரிரு பாற்றாய்ப் |
| பன்மை வினைகொளும் பாங்கிற் றென்ப” |
என்னும் சூத்திரத்தை அர்த்தநாரீசுவரத் திருவுருவ சம்பந்தமான கற்பனை ஒன்றிற் பொருத்தியுள்ளார் (534).
பண்டார மும்மணிக்கோவையில் ஞானாசிரியருடைய திருவருட் சிறப்பைப் பலவகையிலமைத்துப் பாராட்டுமிடத்து, “நின் திருவருளால் என்னுடைய கரணங்கள் சிவகரணங்களாயின. பிறர் திறத்துத் திரிகரணங்கள் என்னும் தொடர், மூன்று கரணங்களென்னும் ஒரே பொருளுடையதாக வழங்கப்பெறும். என் திறத்திலோ மூன்று கரணங்கள், சிவகரணங்களாகத் திரிந்த கரணங்கள் என இரண்டு பொருள்படும் தொடராக அது நிற்கின்றது” (587) என்கின்றார். இங்கே ஒரு பொருட் கிளவி, இரு பொருட் கிளவி என்னும் கிளவிப் பெயர் வகைகளை ஆண்டுள்ளார்;