(656)
என்பதனாற் காசியும் மருத நிலத்தில் இருப்பதைப் புலப்படுத்துகின்றார்.
ஒரு நிலத்துக் கருப்பொருளும் மற்றொரு நிலத்துக் கருப்பொருளும் மயங்கிக் காணப்படுதல் உலக இயற்கை. இதனைத் திணைமயக்க மென்று புலவர் கூறுவர். சான்றோர் செய்யுட்களிலும் பிற்காலத்துக் காப்பியங்களிலும் திணைமயக்க வருணனைகள் காணப்பெறும். இவ்வாசிரியர் நெய்தலும் மருதமும் தம்முள் மயங்கியிருப்பதைப் பின்வருமாறு தெரிவிப்பர்;
“முள்ளைப் புறத்தேகொண்ட நீண்ட இலையை யுடைய தாழையானது தனது வெள்ளிய மடலிலே சுழித்த முகத்தையுடைய சங்கையும் அதனால் ஈனப்பட்ட முத்தையும் தாங்கி நிற்