(344)
என்று ஆளுகின்றார்.
மடலூர்வோர் செஞ்சடை விரித்தும் வெண்பொடி பூசியும் எருக்கங்கண்ணி சூடியும் வருதல் வழக்கம். உமாதேவியாரைப் பிரிந்த சிவபெருமான் இயற்கைத் திருக்கோலங்கொண்டு வீற்றிருக்கையில் இவை காணப்படுதலின் அக்காட்சி மடலூர் குறிப்பைப் புலப்படுத்துமென்பர் (332). தலைவியைப் பெறாதோர் மடலூர்வரென்னும் செய்தியும் அங்ஙனம் ஊருவோர் செய்யும் செயல்களும் இப்பகுதியில் அமைந்துள்ளன.
தலைவனது புறத்தொழுக்கத்தில் அவனோடு தொடர்பு பெறும் மகளிர் சேரிப்பரத்தை, காதற்பரத்தை, காமக்கிழத்தி என்னும் மூவகையினரென்று அகப்பொருளிலக்கணம் கூறும். இவ்வாசிரியர் தலைவியாக ஞானத்தையும் அத்தலைவியைப் பெறாமல் இடைநின்று கவரும் சேரிப்பரத்தையாக ஆணவத்தையும் காமக் கிழத்தியராகச் சுத்தவித்தை முதலியவற்றையும் உருவகம் செய்கின்றார் (478).
அகப்பொருட் செய்திகள்
இவர் செய்யுட்களில் தலைவன் கூற்று, தலைவி கூற்று, தோழி கூற்று, செவிலிகூற்று என்னும் கூற்றுவகைகள் பயின்று