(168)
இதன்கண் தலைவியை உயிரெனக் கூறப்புகும் தலைவன் உயிர் அருவமென்பாரை மறுப்பான் போல அச்செய்தியைச் செப்பவைத்தார். இது
| “காணா மரபிற் றுயிரென மொழிவோர் |
| நாணிலர் மன்ற பொய்ம்மொழிந் தனரே |
| யாஅங் காண்டுமெம் மரும்பெற லுயிரே |
| சொல்லு மாடு மென்மெல வியலும் |
| கணைக்கா னுணுகிய நுசுப்பின் |
| மழைக்கண் மாதர் பணைப்பெருந் தோட்டே” |