36குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

இதனையே தோழி,

“விளங்கனி யொன்றெறி வெள்விடை யோடும் விழிக்கணுழைந்
துளங்கனி யப்புகுந் தாய்”
(660)
என்று உரைக்கின்றாள்.
    கண்வழி யுளம்புகுங் கள்வனாகிய தலைவனைப் புறத்தே தலைவி தேடுதல் என்ன பேதைமை யென்று செவிலி வியக்கின்றாள் (642).

தரிசனத்தாற் பெற்ற காதல்

    சிவமெருமானையே தலைவனாக வைத்துப்பாடும் பாட்டுக்கள் சிலவற்றில் அவரைத் தரிசித்துத் தலைவி மயல்கொண்டாளென்ற செய்தி வருகின்றது. தியாகப் பெருமானது கைம்மானையும், யானைத்தோலையும், கச்சையும், சங்கத் தடங்காதையும், தார் மார்பையும் தரிசித்த தலைவி ஒருத்தி தன் உள்ளத்தே பூண்ட மயற்பெருக்கை,

“அங்கத் தடங்கா தவா”
(317)
என்று வெளியிடுகின்றாள்.
ஸ்ரீசோமசுந்தரக் கடவுளைத் தரிசித்து அவரது நகையிலே ஒரு தலைவி மயங்கி நிற்கிறாள்; இதனை அவளது தோழி,

“கூடார் புரந்தீ மடுக்கின்ற . .. . . . . . . ரிளமூரலே”
(143)
என்று அறிவிக்கின்றாள்.
    மற்றொரு தலைவி தன் தாயோடு சென்று சொக்கநாதரைத் தரிசித்து மயலுழந்ததை ஒரு தோழி கூறுகின்றாள் (195).

    இங்ஙனமே, ‘அம்பொன்மணி மதிற்றில்லை நடராசன் அணி மறுகிற், செம்பொன்மணிப் பொலந்திண்டேர்த் திருவுலாப் போதுங்கால்’ சென்று தரிசித்த தலைவி யொருத்தி மயலுழந்த செய்தியை ஒரு செவிலி கூறிப் புலம்புகின்றாள் (538, 542). இவை உலாவென்னும் பிரபந்த அமைப்பை நினைப்பூட்டுகின்றன.

சந்திரோபாலம்பனம்

    மாலையிளம் பிறையைத் தலைவியும் தோழியும் செவிலியும் கூடி எத்தனை குறை கூறுகிறார்கள்! ஒரு தலைவி, “இந்தச் சந்திரன் ஒரு யமன். இவன் என் உயிரை வாங்குகிறான். மதுரேசர் என் கருத்தில் இருந்தும் இந்தத் துன்பம் விட்டபாடில்லை. இந்த ஊரிலே நீதி சற்றும் இல்லை. சீசீ! இனி இங்கே இருத்தலொண்ணாது; தோழிகளே புறப்படுங்கள்” (113) என்று கூறுகின்றாள். செவிலித் தாயும் இளம்பிறைக்