(605).
சந்திரனை வெறுத்துக் கூறும் சந்திரோபாலனச் செய்யுட்களைப் போலவே மன்மதோபாலம்பனச் செய்யுட்களும் மிக்க சுவை யுடையனவாகும்.
காசிப்பிரான்பால் ஈடுபட்ட தலைவி யொருத்தி காமன் கணைக்கு இலக்காகி வருந்துகின்றாள்; காமநோய் தாங்காமல் அவள் அவனை நோக்கி, “இவ்விடம் என்றிரான் படைவீடென்பதை நீ உணரவில்லையோ? ஏன் எம்மைச் சூழ்ந்தாய்? உன்னை முன்னரே எரித்த அன்ற்கண்ணையும் பகைவரை ஒழிக்கும் மழுப்படையையும் அவர் உடையார்” (648) என்று இயம்புகின்றாள்,
இறைவன் படைவீட்டைத் தன் இடமாக ஆக்கிக்கொண்ட மன்மதனது ஆண்மையையும், அதனால் தாம் கொண்ட அச்சத்தையும் ஒரு தோழி,
| “ஆர்க்கும் .... சுரைப்பாரார்” |
(613)
என்று வெளியிடுகின்றாள்.
மன்மதன் இங்ஙனம் ஆண்மை செய்யவும் அதனை விலக்காதிருக்கும் இறைவனது ஆண்மையை எள்ளி நகையாடிகின்றாள் ஒரு நங்கை: