40குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

ஒவ்வொன்றையும் சில சிலவற்றையும் கூறுவார் ஒருபால் இருப்ப, பலவும் சேரந்து தலைவியும் ஓருயிரை அலைத்தலை ஒரு செவிலி கூறி இரங்குகின்றாள்;

“கூற்றொன் றலவொரு கோடிகெட்டேன்கொழுந்.....பொன்றுமே”
(109)
    நாம் அவள் முறையீட்டைக் கேட்கும் பொறுமையுடையோமாயின் அந்த ஒரு கோடிக் கூற்றையும் வரிசையாகச் சொல்லிவிடும் வேகத்தில் அமைந்தருக்கிறது இச்செய்யுள்.

மெய்ப்பாடுகள்

    தலைவனது அருளை எதிர்நோக்கி வருந்தும் தலைமகளது மெய்ப்பாடுகளை அங்கங்கே காணலாம். அவள் துயிலிழந்து பசலை பூத்து வாடுகின்றாள்; மயக்கத்தால் பிறர் நகைத்தற்குரிய செயல்களைச் செய்கின்றாள்; ஊணை வெறுக்கின்றாள்; உடல் மெலிய அவளது வளைகள் நழுவிகின்றன; செயலற்று உயிர் நீங்கும் நிலையிற் கிடக்கின்றாள்; இறைவனது மாலை பெற்றால் அவள் உய்வாளென்று யாவரும் கூறுகின்றனர்.

    தலைவனது கூட்டத்தைப் பெறுதற்கு அடையாளமாக அவனது மாலையை விரும்புதல் தலைவியின் இயற்கை பிரபந்தங்களில் இச்செய்தி மிகுதியாக்க் காணப்பெறும்.

    சிவபெருமானது மாலையை ஒரு தலைவி வேண்டி நிற்கின்றாள்; அவளுடைய தோழி, “சண்டேசருக்கல்லாமல் அம்மாலை பிறர் கொள வரிது” (542,639) என்று கூறுகின்றான். அவளைத் தலைவி முனிந்து பகைநோக்களிக்கின்றாள் (542); “அம்மாலையைப் பெறும் சண்டேசர் தவம் பெரிதுபோலும்!” என வியக்கின்றாள்;

“மலர்த்தாமம் ...........ளெறிந்தார்க்கே”
(118).
    இறைவனது கருணையினால் வண்டுகூட அவன் அணிந்த மாலையில் மொய்க்குமென்று அறிந்தவளாதலின் தான் பெறுதற்கரிய மாலையை அவ்வண்டு பெறுதற்குப் பெருந்தவம் செய்திருக்க வேண்டுமென்று நினைந்து,

“மின்றிரண்ட தெனப்புரளும் பொலங்கடுக்கைத்.....புகலு வீரே”
(652)
என்று தன் தோழியரை நோக்கி வினாவுகின்றாள்.
    பிரிவால் வருந்தும் மகளிருக்கு மேனியழகு கெடப் பசலை உண்டாகுமென்பர்; இதனைப் பசலைபாய்த லென்னும் மெய்ப்பாடாக அமைப்பர் தொல்காப்பியர் (தொல். மெய்ப்