(137)
என்கிறாள்.  மதுரையிலுள்ள வெள்ளிமன்றத்தை இது குறித்து நிற்கின்றது.  மடலேறுவார் மன்றிற் செல்வது மரபு,
    தலைவியின் நிலையைக் கூறி இரங்கும் செவிலி, “மன்மதனது கரும்பை இவள் வேம்பென்கிறாள்.  தேவரீர் திருத் தோளிலணிந்த வேம்பைக் கரும்பென்கிறாள்.  இவள் இவ்வாறு மாறியாடுகின்றாள் (மாறாகப் பேசுகின்றாள்); மாறியாடிய தேவரீரைத் தரிசித்தாருக்கும் மாறியாடும் வல்லபம் வருமோ? என்று இயம்புகின்றாள்.  இதன்கண் கால்மாறியாடிய திருவிளையாடல் குறிக்கப்பெற்றது.