(654)
என்பதிற் குறிக்கின்றாள்.
அகப்பொருட் செய்திகளை இவ்வாசிரியர் இவ்வாறு மிக விரிவாகப் பலவகை நயங்களோடு அமைத்துள்ளமை இவருடைய அகப்பொரு இலக்கண நூற்பயிற்சியையும் புலமைத்திறத்தையும் வெளியிடுகின்றது. புறப்பொருட் செய்திகளையும் ஏற்றவிடங்களில் அங்கங்கே இவர் அமைத்துச் செல்கின்றார்.
போர்செய்யப் புகுவாரும், போர்செய்வாரும், போரில் வென்றாரும் செய்யும்செயல்களையும் போர்க்களத்தே நிகழும் நிகழ்ச்சிகளையும் கவிமரபு பிறழாமற் கூறும் ஆற்றலுடையவர் இவர். போர்க்கள நிகழிச்சிகளைக் கூறும் செய்யுட்கள் ஓசையினாலும் பொருளாலும் வீரச் சுவையைத் தருவனவாக அமைந்துள்ளன.
போர்செய்யப் புகுவார் பகைவேந்தனது பசுநிறையைத் கோடல் தமிழ் மரபு. இங்ஙனம் நிரைகோடற்கு முன் நற்்சொல்லாகிய நிமித்தம் பாரத்தலும், ஒற்றரைக் கொண்டு பகைவர்