ஆராய்ச்சி75

    திரிபுரங்களைச் சிவபெருமான் நகைத்தெரித்த செய்தியை இவர் நகைச்சுவைபடப் புலப்படுத்துகின்றார்; “தில்லைவனத்தீசரே, நீர் என்ன காரியஞ் செய்தீர்? சிரிக்கத்தான் சிரித்தீர்! அந்தச் சிரிப்பை முதலிலே சிரித்திருக்கக் கூடாதா? பாம்பை நாணாக ஏற்றிப் பொன் மலையைத் தோள் நோவ வளைத்துப் பிறகு அவற்றைப் பயன்படுத்தாமற் சிரித்தீரே” (476) என்கிறார். இதிற் பேதைமை பற்றி வந்த நகைச்சுவை தோற்றியது. இதைப்போன்ற கருத்தொன்றைச் சற்று விரிவாக 501-ஆம் செய்யுளில் அமைக்கின்றார்:

    சிவபெருமான் பரசும் பினாகமும் சூலமும் திருக்கரத்திலே சுமந்து கொண்டிருக்கிறாரே; அவற்றால் அவருக்கு பயன் ஏதாவது உண்டா? முன்பு மன்மதசங்காரஞ் செய்தார்; அதற்கு அவர் நெற்றிக்கண்தான் பயன்பட்டது; திரிபுரதகனம் செய்த்து அவருடைய நகை; பிரமன் தலையைக் கொய்த்தோ அவருடைய கைந்நகம்; யமனை உதைத்ததோ அவருடைய திருவடி; இப்படி அவர் செய்த பராக்கிரமங்களில் ஒன்றுக்காவது இவை உபயோகப்படாமல் இருப்பவும் இவற்றை அவர் தம் திருக்கை சிவக்கும்படி எதற்காகத் தூக்கிக்கொண்டிருக்கின்றார்!” என்னும் பொருளுடையது அச்செய்யுள்.

    திருமால் சிவபிரானது சத்தியென்பது சைவநூற் கொள்கை (572); இதனை நினைந்து,

“பூந்தண் பசுந்துழாய்ப் போது நறாவிரி
 தேந்தண் டிறடிணடோட் டேவற்குந் தேவிக்குங், காந்தன்”
(491)
என்று சிவபெருமானை இவர் சமற்காரமாக்க் குறிக்கின்றார். பிறிதோரிடத்தில், “மதுரேச, நின் திருவுருவம் ஆணும் பெண்ணுமாகிய ஈருருவும் ஓருருவாய் இயைந்தமைந்தது வியப்பு; துழாய் மாலையணிந்த திருமால் திருமகளுக்கும் நிலமகளுக்கும் கணவராக இருப்பதோடு நினக்கு மனைவியாகவும் நிற்பது அதனினும் வியப்பானது” (199) என்கிறார்.

    சிவபெருமான் தமக்கு அருளாமைக்குக் காரணம் கூறப்புகுவார்போலத் தொடங்கி,“பிருகுமுனிவர்கொடுத்ததசாவதாரத்துக்குரிய சாபத்தால் பல பிறப்பெடுக்கும் திருமால் அறிந்ததைப் போலப் பிறத்தலின் துன்பத்தை நீ அறியாய்; ஆதலின் என் பிறவித் துன்பத்திற்காக என்பால் இரங்கி அருளவில்லைபோலும்!” (324) என்று சிவபரத்துவத்தை உணர்த்துகின்றார்.