(640)
என்றவிடத்து அழகிதென்பதை அழகன்றென்னும் எதிர்மறைக் குறிப்புப்பட வைத்தார்.
“வெள்ளென” (18) என்னும் நிறம்பற்றிய குறிப்பால் தோல்வியைக் குறிப்பர். கெட்டேன், கோ என்னும் இரக்கக் குறிப்புச் சொற்களையும், ‘ஓ’ (493) என்னும் வியப்புக் குறிப்பையும் இவர் அமைக்கின்றார். “நமனார்” (465) என்று யமனை விளிக்கும் போதுள்ள பன்மை இகழ்ச்சிக் குறிப்பில் வந்தது.
இவற்றையன்றி, “கிண்கிணெனுங் கிண் கிணி” “கிணின் கிணினென” (19, 400), “கலின் கலினென” (400), “நெறுநெறு நெறுவென” (539), “கூகாவென்று குரைப்பது” (555), “இழுமென் குதலை” “இழுமென் மழலை” (394, 656), “இழுமெனருவி” (409), “இழுமென் மொழி” (439) என்பவற்றில் அனுகரண வோசைகளாகிய ஒலிக்குறைப்பை அமைக்கின்றனர்.