| விரிதலை முதலொடு விளைபுல முலையவு | | ழக்கிய முட்சுறவின் | | விசையினின் வழிநறை மிடறொடி கமுகின்வி | | ழுக்குலை நெக்குகவும் |
| கரையெறி புணரியி னிருமடி பெருகுத | | டத்தும டுத்தகடக் | | களிறொடு பிளிறிட விகலிய முகிலினி | | ரட்டியி ரட்டியமும் |
| முரசதிர் கடிநகர் மதுரையில் வளர்கிளி | | முத்தம ளித்தருளே | | முழுதுல குடையவொர் கவுரியர் குலமணி | | |
53. | புதையிருள் கிழிதர வெழுதரு பருதிவ | | ளைத்தக டற்புவியிற் | | பொதுவற வடிமைசெய் திடுவழி யடியர்பொ | | ருட்டலர் வட்டணையிற் |
| றதைமலர் பொதுளிய களியளி குமிறுகு | | ழற்றிரு வைத்தவளச் | | சததள முளரியின் வனிதையை யுதவுக | | டைக்கண்ம டப்பிடியே |
(2) விரிதலை முதல் - நெல்லும் கரும்புமாகிய பயிர்கள். முள்ளையுடைய சுறா மீன். நறை - கள். நறை நெக்கு உகவும்.
(3) தடத்து - தடாகத்தில். இரட்டி இரட்டிய - இரு மடங்கு ஒலித்த.
(3-4) மும்முரசு - வீரமுரசு, தியாகமுரசு, மணமுரசு என்பன. (புறநா. 58: 12, உரை.) (பி-ம்.)‘கடிமதில்’. கவுரியர் - பாண்டியர்.
(முடிபு.) நறை உவட்டெழவும் வழிநறை உகவும் இருமடி பெருகுதடத்தில் மடுத்த களிறொடு பிளிறிட இகலிய முகலின் இரட்டி இரட்டிய மும்முரசு அதிர் மதுரை.
53. (அடி, 1) பருதி வளைத்த - சூரியனாற் சுற்றப்படும். பொதுவற அடிமை செய்திடு - வேறு ஒருவருக்கும் அடிமை செய்யாது அம்பிகைக்கே அடிமைத்திறம் பூணும்; “பொதுவினிற்றீர்த்தென்னை யாண்டோன்” (திருச்சிற். 146.) அலர் வட்டணை - தாமரை மலராகிய வட்ட அணை.
(2) சததளம் - நூறு இதழ். வனிதை - கலைமகள். திருவையும் வனிதையையும் உதவு கடைக்கண். அம்பிகையின் வலக் கண்ணிற்
|