பக்கம் எண் :

72குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

பதுமமொ டொழுகொளி வளையுநி னளினமு
   கத்துமி டற்றுமுறப்
பனிமதி யொடுசுவை யமுதமு நுதலொடு
   சொற்குத லைக்கணிறீஇ

முதுதமி ழுததியில் வருமொரு திருமகள்
   முத்தம ளித்தருளே
முழுதுல குடையவொர் கவுரியர் குலமணி
   முத்தம ளித்தருளே.    
(10)

6. வருகைப் பருவம்

ஆசிரிய விருத்தம்
54.
அஞ்சிலம் போலிட வரிக்குரற் கிண்கிணி
   அரற்றுசெஞ் சீறடிபெயர்த்
தடியிடுந் தொறுநின் னலத்தகச் சுவடுபட்
   டம்புவி யரம்பையர்கடம்

றிருமகளும் இடக்கண்ணிற் கலைமகளும் உதித்தனரென்பர்; “திருமகள் வலக்கண் வாக்கின் சேயிழை யிடக்கண் ஞானப். பெருமக ணுதற்கணாகப் பெற்றுவான் செல்வங் கல்வி, அருமைவீ டளிப்பாள் யாவ ளவள்” (திருவிளை. 19 : 2.)

    (1-2) அடயர் பொருட்டுத் திருவையும் கலைமகளையும் உதவும் மடப்பிடி. அம்பிகையின் அடியார்கள் திருவையும் கல்வியையும் பெறுவரென்றபடி.

    (3-4) அம்பிகையைத் திருமகளாக உருவகம் செய்கின்றார்.

    பதுமம் - பத்ம நிதி. வளை - சங்க நிதி. இவை முறையே முகத்திலும் கழுத்திலும் உற்றன. திருமுகத்திற்குத் தாமரையும் கழுத்திற்குச் சங்கும் உவமை கூறும் மரபை நினைந்து இங்ஙனம் அமைத்தார். மதி நுதற்கு உவமை. அமுதம் சொல்லுக்கு உவமை. தமிழ் உததி - தமிழ்க் கடல்.

    திருமகள் பாற்கடலில் தோற்றிய பொழுது பத்மநிதி, சங்கநிதி. சந்திரன், அமுதம் முதலியன எழுந்தனவாதலின் இங்கே அவற்றில் ஒவ்வொன்றற்கும் ஒவ்வோருறுப்பைக் கூறினார். தனித்தனியே எழுந்த அவற்றைத் தன் திருமேனியின் உறுப்பாகவே கொண்டெழுந்தாளென்பது ஒரு நயம். குலமணி: விளி.

    54. (அடி, 1) சிலம்பு ஓலிட, அரிக்குரலை - தவளை போன்ற குரலையுடைய. அலத்தகச் சுவடு - செம்பஞ்சுக் குழம்பின் அடையாளம். அம்புவியில்.