(196).
(469)
என்று கூறுவர். இவ்விளையாட்டுக்குரிய பாடல்கள் தனியே உண்டு. கலம்பக உறுப்புக்களில் அம்மானையென வருவது இவ்விளையாட்டுக்குரிய பாட்டே.
நீராடற் பருவத்தில் பாட்டுடைத் தலைவியை நீராட வேண்டுமென்று வேண்டுதலும் ஊசற் பருவத்தில் ஊசலாட வேண்டுதலும் காணப்படும். ஊசலென்பது மகளிர்க்குரியதொரு விளையாட்டு.
ஆண்பாற் பிள்ளைத் தமிழில் வரும் சிற்றிற்பருவத்தில் சிற்றில் விளையாடும் சிறுமியர் பாட்டுடைத் தலைவர் தம் சிற்றிலை அழிக்கும்போது ‘எம் சிற்றிலை அழியாதொழிக’ என வேண்டுதல் கூறப்படும்.
சிறுபறைப்பருவத்திற் பாட்டுடைத் தலைவரைச் சிறுபறை முழக்கும்படியும், சிறுதேர்ப்பருவத்தில் சிறுதேருருட்டும்படியும் வேண்டுதல் கூறப்படும்.
கலம்பகங்கள் மூன்றை இவர் பாடியுள்ளார். கலம்பகமென்பதற்குப் பலவகைப்பொருள் கூறப்படினும் பலவகை