(செய்யுள். 112)
என்பதன் நினைவிலிருந்து எழுந்தவையாகும்.
திருக்குறளில் இவர் சிறந்த பயிற்சியுடையவர். நீதிநெறி விளக்கம் திருக்குறளிற் கண்ட கருத்துக்களை வேறு உருவத்திலே அமைத்துக் கூறுகின்றது. சில இடங்களில் திருக்குறளிலுள்ள சொற்றொடர்களையும் பொன்னேபோற் போற்றி எடுத்தாண்டுள்ளனர்.
| “மடங்கொன் றறிவகற்றுங் கல்வி” |
(208)
என்பதில் அறிவகற்றுமென்பது அறிவை விரிவுபடுத்துமென்னும் பொருளில் வந்தது. இத்தொடர்,
| “அறிவகற்றும். ஆகலூ ழுற்றக் கடை” |
(குறள், 372)
என்பதினின்றும் எடுத்துக்கொண்டதாகும்.
| “மனைத்தக்காண் மாண்பில ளாயின்” |
(215)
என்பதில்,
| “மனைத்தக்க மாண்புடைய ளாகி” |
(குறள், 51)
என்பதன் சார்பு உள்ளது.
| “பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார் |
| கிழமை பிறிதொன்றுங் கொள்ளார்” |
(252)
என்பதிற் பழமையும் கிழமையும் ஒருங்கே அமைத்ததற்கு,
| “ பழமை யெனப்படுவ தியாதெனின் யாதும் |
| கிழமையைக் கீழ்ந்திடா நட்பு” |
(குறள்,801)
என்னும் குறளின் நினைவே காரணம்.