ஆராய்ச்சி87

“தகரக் குழலி னறையுநறை தருதீம் புகையுந் திசைக்களிற்றின்
 தடக்கை நாசிப் புழைமடுப்ப”
(61)
என்னும் இவரது கற்பனை கம்பராமாயணத்தில் வரும்.
“..........................................பரிமள கந்தம்
 மருப்புடைப் பொருப்பேர் மாதிரக் களிற்றின்
 வரிக்கைவாண்மூக்கிடைமடுப்ப”
(நிந்தனைப்.2)
என்பதை அடியொற்றி வந்தது.
சீதை இராமபிரானைக் கண்டமாத்திரத்தே காமுற்றடை,

“கண்வழிநுழையுமோர்கள்வனேகொலாம்”
(மிதிலைக்.55)
என்று கூறுவதாக்க் கம்பர் அமைத்தார்; இவ்வாசிரியர்,
“கண்பு குந்தென் கருத்து ளிருக்கவும்”
(113)
என்று தலைவி ஒருத்தி கூறிவதாகச் செய்யுள் செய்தார்.
“உனது, முகத்தினழகெம் வடிக்கண்ணான்
 மொண்டுண்டனம்”
(423)
என்பது
“இருந்தகுலக் குமரர்தமை யிருகண்ணின் முகத்தழகு
 பருக நோக்கி”
(மிதிலைக்.457)
என்பதை நினைப்பிக்கின்றது.
    ‘நமரங்காள்’ என்னும் சொல்லை இவ்வாசிரியர் ஐந்து இடங்களில் உபயோகித்துள்ளார். அச்சொல் கம்பராமாயணத்தில் வானரர் களங்காண்படலத்திற் பல இடங்களில் வருகின்றது. கம்பர் அச்சொல்லை,

“நாகக் குன்றி னின்றன காண்மி னமரங்காள்”
“நளினக் காடே யொப்பன காண்மி னமரங்காள்”
என்பன போல ஐந்துசீருள்ள செய்யுளில் அங்கே வைத்தார்; இவரும்,

“வெஞ்சம னஞ்ச வேலொ டெதிர்ந்தா னமரங்காள்”
(520)
என அத்தகைய செய்யுளில் ஐந்தாஞ் சீராக வைத்துள்ளார்.
“வெள்ளி வீழிடை வீழ்த்தெனத் தாரைகள் .................
 வழங்கின மேகமே”
(கம்ப. ஆற்றுப்.4)
என்பது கம்பர் வாக்கு.
“மின்செய் கொண்மூ வெள்ளிவீழ் வீழ்ப்ப”
(524)
என்பது இவர் வாக்கு.
    இவர் சில உவமைகளைக் கம்பர் செய்யுளிலிருந்து எடுத்தாண்டுள்ளார்: