(705)
என்று சகலகலாவல்லியை இவர் வேண்டிக்கொள்ளும்பொழுது பண்ணை முதலிலே வைத்தல் காண்க.
பண்ணைப் (290, 539, 625, 705) பொதுவகையாற் குறித்தலோடு விளரிப்பண் (81), செவ்வழிப்பண் (151, 352) என இரண்டு பண்களின் பெயர்களைக் குறிப்பர். மந்தர மத்திம தாரங்களாகிய மூன்று ஸ்தாயிகளை மூவகை நிலயம் (581) என்பர். ஏழுஸ்வரங்களை. “ஏழிசை” (312, 656) என்றும், “ஏழு சுரம்” (581) என்றும் குறிப்பிடுவர்.
குழலிசையை வேயிசை (203), தீங்குழற்கானம் (677) எனப் பாராட்டுர். வீணை வாசிப்போரை,