(305)
என்பதில் இல்லறச் செய்தியைத் துறவற இலக்கணத்திற்கு உவமையாக்கி அவை இரண்டின் இயல்பையும் ஒருங்கே புலப்படுத்தினார்.
சில இடங்களில் யோகியர் இயல்பும் சிவயோகசாதன இயல்புகளும் கூறப்பட்டுள்ளன.
| “செல்வ மென்பது சிந்தையி னிறைவே |
| அல்கா நல்குர வவாவெனப் படுமே” |
(475)
என்னும் அடிகள் பொன்னெழுத்திற் பொறிக்கத்தக்கவை.
| “பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும் |
| மறவாமே நோற்பதொன் றுண்டு - பிறர் பிறர் |
| சீரெல்லாந் துற்றிச் சிறுமை புறங்காத்து |
| யார்யார்க்குந் தாழ்ச்சி சொல்ல்” |
(225)
என்பது யாவரும் உலகில் நன்மதிப்பை அடைதற்குரிய சிறந்த உபாயமாக உள்ளது.
| “...................... என்சொலினும் |
| கைத்துடையான் காற்கீ ழொதுங்குங் கடன்ஞாலம்” |
(216)
என்பதில் உலகத்தாருடைய பேதைமையை விளக்குகின்றார்.
| “ஈகை யரிதெனினு மின்சொலினு நல்கூர்தல் |
| ஆவா விவரென்செய் வார்” |
(273)
என்பதனால் கடுஞ்சொற் கூறுவார்பால் இவருக்கிருந்த வெறுப்பு எத்தகையதென்பது புலனாகின்றது.