(569)
எனவும் அதனைப் பாராட்டுவர்.
உருத்திராக்கம் திருநீறு என்னும் சிவ சின்னங்களையும் பஞ்சாட்சரத்தையும் சில சில இடங்களிற் குறிப்பிடுவர்; உருத்திராக்கத்தைக் கண்டிகையென்பர் (1 : 55, 565); திருநீற்றை வெண்பொடி, வெண்ணீறு, வெண்பலி, வெண்சாந்து, பூதி என்பர்; திரிபுண்டரத்தைச் சில விடங்களிற் குறித்துச் செல்வர் (1 ; 38, 14, 136). பஞ்சாட்சரத்தை,
(1 ; 68-9)
என்றவிடத்துக் குறித்ததோடு “கலைமறைக்கு நாயகமா மஞ்சக் கரம்” (630) என்று சிறப்பிப்பர்.
சைவசம்பிரதாயப்படி இவர் வழங்கும் சொற்களில் சில: அடிகள், திருக்கூத்து, திருச்சாந்து, திருச்செவி, திருநடம், திருமுன், திருமேனி, திருவடி, திருவமுது, திருவரை, திருவுலா. தாம் ஒன்றை விண்ணப்பித்துக் கொள்ளும்போது,