பக்கம் எண் :

74குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

வண்டுபடு முண்டக மனைக்குடி புகச்சிவ 
   மணங்கமழ விண்டதொண்டர்
மானதத் தடமலர்ப் பொற்கோயில் குடிகொண்ட
   மாணிக்க வல்லிவில்வேள்

துண்டுபடு மதிநுதற் றோகையொடு மளவில்பல
   தொல்லுரு வெடுத்தமர்செயும்
தொடுசிலை யெனக்ககன முகடுமுட் டிப்பூந்
   துணர்த்தலை வணங்கிநிற்கும்

கண்டுபடு கன்னல்பைங் காடுபடு கூடற்
   கலாபமா மயில்வருகவே
கற்பகா டவியிற் கடம்பா டவிப்பொலி
   கயற்கணா யகிவருகவே.    
(2)

56.
முயல்பாய் மதிக்குழவி தவழ்சூ லடிப்பலவின்
   முட்பொதி குடக்கனியொடு
முடவுத் தடந்தாழை முப்புடைக் கனிசிந்த
   மோதிநீ ருண்டிருண்ட

    (2) முண்டகமன் - செந்தாமரையும் வெண்டாமரையுமாகிய வீடுகள். விண்ட - மலர்ந்த. மானதத் தடமலர்ப் பொற்கோயில் - மனமாகிய பெரிய தாமரை மலராகிய அழகிய கோயிலில்; “என்னெஞ்சக் கஞ்சமுஞ் செஞ்சொற் றமிழக்கூட லுங்கொண்ட காமர் பூங்கொடி” என்றார் முன்னைப் பாட்டிலும் மாணிக்கவல்லி: விளி. வில்வேள் - காமன்.

    (1-2) திருமகளும் கலைமகளும் வெறுந்தாமரைமலரிற் குடிபுக நீ சிவமணம் கமழும் அடியால் இதயமாகிய தாமரைமலரிற் புகுவாயென்று பாராட்டினார்.

    (3) தோகை - இரதி. சிலை - வில்.

    (4) கண்டுபடு கன்னல் - கற்கண்டு உண்டாவதற்குக் காரணமான கரும்பு; எழுவாய். காடுபடு - காட்டைப்போல உண்டாகும்; “கரும்பல்லது காடறியாப், பெருந்தண்பணை” (புறநா. 16 : 15-6); “கரும்பலாற் காடொன் றில்லாக் கழனிசூழ் பழன நாடும்” (சீவக. 2902.)

    (3-4) மதுரையிலுள்ள கருப்பங்காடு மன்மதன் பல்வேறு உருவம் எடுத்து இரதியுடன் சேர்ந்து அமர் செய்வதற்கு உதவும் விற்களைப் போல வளர்வதென்றார்.

    56. இச்செய்யுளில் கயல்மீனின் செயல் கூறப்படும்.

    (அடி, 1) சூல் அடிப்பலவு - ஈரப்பலா; சூல் - கருப்பம் (52) குடக்கனி - குடம்போன்ற பழம். முடவு - வளைவு. தாழை முப்புடைக் கனி - தேங்காய்.