| புயல்பாய் படப்பைத் தடம்பொழில்க ளன்றியேழ் | | பொழிலையு மொருங்கலைத்துப் | | புறமூடு மண்டச் சுவர்த்தல மிடித்தப் | | புறக்கடன் மடுத்துழக்கிச் |
| செயல்பாய் கடற்றானை செங்களங் கொளவம்மை | | திக்குவிச யங்கொண்டநாள் | | தெய்வக் கயற்கொடிக டிசைதிசை யெடுத்தெனத் | | திக்கெட்டு முட்டவெடிபோய்க் |
| கயல்பாய் குரம்பணை பெரும்பணைத் தமிழ்மதுரை | | காவலன் மகள்வருகவே. | | கற்பகா டவியிற் கடப்பா டவிப்பொலி | | |
57. | வடம்பட்ட நின்றுணைக் கொங்கைக் குடங்கொட்டு | | மதுரவமு துண்டுகடைவாய் | | வழியும்வெள் ளருவியென நிலவுபொழி கிம்புரி | | மருப்பிற் பொருப்பிடித்துத் |
| தடம்பட்ட பொற்றாது சிந்துரங் கும்பத் | | தலத்தணிவ தொப்பவப்பிச் | | சலராசி யேழுந் தடக்கையின் முகந்துபின் | | தானநீ ரானிரப்பி |
(2) படப்பை - தோட்டக்கூறு. ஏழ் பொழில் - ஏழு தீவு; ஏழு சோலைகளென்று பொருள் கொள்ளுதலும் பொருந்தும். அண்டசை சுவர்த்தலம் - வானமாகிய சுவர். அப்புறக்கடலை - பெரும்புறக்கடல்.
(3) தானை - அம்பிகையின் படை; (30.) செங்களம் கொள - இரத்தத்தாற் சிவந்த போர்க்களத்தைத் தனதாக்கிக் கொள்ள; இது வெற்றிபெற்றார் செய்யும் செயல். கயற்கொடிகள் - அம்பிகையின் துவசங்கள். எடுத்தென - எடுத்தாற்போல. வெடிபோய் - துள்ளிச்சென்று.
(4) கயல் - எழுவாய். குரம்பு அணை - கரைகள் பொருந்திய. பெரும்பணை- பெரிய வயல். மதுரை காவலன் - பாண்டியன்; தொகுத்தல்.
(முடிபு.) கயல், சிந்த மோதி அலைத்து இடித்து மடுத்து உழக்கி வெடிபோய்ப் பாயும் பணையென்க.
57. இச்செய்யுளில் விநாயகக் கடவுளின் திருவிளையாடல் கூறப்படும்.
(அடி. 1) வடம் - முத்து வடம். மதுர வமுது - இனிய பால். கொம்பின் ஒளிக்குப் பால் உவனமை. கிம்புரி - தந்தத்தில் அணியப்படும் பூண்.
(2) பொற்றாதை அப்பி. சலராசி - கடல். தானநீர் - மதநீர்.
|