| முடம்பட்ட மதியங் குசப்படை யெனக்ககன | | முகடுகை தடவியுடுமீன் | | முத்தம் பதித்திட்ட முகபடா மெனவெழு | | முகிற்படா நெற்றிசுற்றும் |
| கடம்பட்ட சிறுகட் பெருங்கொலைய மழவிளங் | | களிநீன்ற பிடிவருகவே | | கற்பகா டவியிற் கடம்பா டவிப்பொலி | | |
58. | தேனொழுகு கஞ்சப் பொலன்சீ றடிக்கூட்டு | | செம்பஞ்சி யின்குழம்பாற் | | றெள்ளமு திறைக்கும் பசுங்குழவி வெண்டிங்கள் | | செக்கர்மதி யாக்கரை பொரும் |
| வானொழுகு துங்கத் தரங்கப் பெருங்கங்கை | | வாணிந்தி யாச்சிவபிரான் | | மகுடகோ டீரத் தடிச்சுவ டழுத்தியிடு | | மரகதக் கொம்பு கதிர்கால் |
| மீனொழுகு மாயிரு விசும்பிற் செலுங்கடவுள் | | வேழத்தின் மத்தகத்து | | வீற்றிருக் குஞ்சே யிழைக்கும் பசுங்கமுகு | | வெண்கவரி வீசும்வாசக் |
(3) மதியை அங்குசமாகிய தன் ஆயுதமென்று எண்ணி, மேகத்திற்கு முகபடாமும் நட்சத்திரங்களுக்கு அதிற் பதித்த முத்துக்களும் உவமை. (4) களிறு - விநாயகரை. (பி-ம்.) ‘கன்றீன்ற;.
58. (அடி, 1-2) சிவபெருமான் அம்பிகையின் ஊடலை நீக்கும் பொருட்டு வணங்கும்போது அவள் திருவடியிலுள்ள செம்பஞ்சுக் குழம்பு பட்டு இறைவன் திருமுடியிலுள்ள பிறையும் கங்கையும் செந்நிறத்தை அடைதல் கூறப்படும். கஞ்சம் போன்ற சீறடி. பசுங்குழவி வெண்டிங்கள்; 498. செக்கர்மதி - சிவப்பு நிறமுள்ள சந்திரன். வாணி நதி செந்நிறமுடையது. மகுட கோடீரம் - மகுடமாகிய சடை. மரகதக் கொம்பு; விளி.
(3) சேயிழை - இந்திராணி. (பி-ம்.) ‘வேழத்து’ கமுகமரம் தன் பாளையால் இந்திராணிக்கு வெண்கவரி வீசியது.
|