ஆராய்ச்சி111

“தினகரபுரித் தேவ தேவன்”
(355),
“செத்துப் பிறக்கின்ற தெய்வங்கண் மணவாள”
(360-4),
“ஆதிப் பிரானென்று மும்முதற்
   கடவுளு மடித்தொழும் பாற்ற”
(364),
“முத்தேவா மிறைவரு முறைமுறை
   பணிய விருக்கு முதற்றேவே”
(389)
“ஒருவ னிருவ ரொடுகை தொழுந லுபய ரணன்”
(409),
“மூலமெ னக்குல நான்மறை யோலிடு முழு முதலே”
(375),
“தினகர புரிவரு தனிமுதல்”
(388)
என்பவற்றில் முருகவேளுடைய முழுமுதற்றன்மையை உணர்த்துகின்றார்.

“திருவடித் துணையென் முடிபதித்தவடு
   வாறாத மெய்ப்புக ழாளியை”
(351),
“எம் ஐயனை”
(352),
“எனை முத்தித் தடங்கரை விடுப்பவன்”
(418)
என்பவற்றில் அவர் தமக்கு அருள் செய்ததைக் குறிப்பிடுகின்றார்.

“ஒழியாத புவனத் துயிர்க்குயிர தாய்நிற்ப
     தொருதெய்வ முண்டெனவெடுத்
துரையா ளூணர்த்துவதை யொழியவே ரெவர்கட்கு
     மூன்கண் ணுளக்கண்ணதாம்
விழியாக முன்னின்று தண்ணளி சுரந்தவர்கள்
     வேண்டிய வரங்கொடுப்பான்
மெய்கண்ட தெய்வமித் தெய்வமல் லாற்புவியில்
     வேறில்லை”
(415)
என்னும்போது இவருக்கு அத்தெய்வத்தின்பாலுள்ள முறுகிய பக்தி புலனாகின்றது. அவ்வத் தெய்வங்களை தலைமையாக வைத்துப் பாராட்டும்போது அவற்றை உயர்வாகச் சிறப்பிக்கும் இம்முனிவர் பிரான் தியாகப்பெருமானைச் சொல்லுகையில்,

“என்னுயிர்க் கொக்கு மிளஞ்சேயொ டேழுல கீன்றவன்னை
 மன்னுயிர்க் கொக்குங் கமலைப்பிரான்”
(326)
என்கின்றார். இங்கே பிறதெய்வத்தைப் புகழும்போதும், “என்னுயிர்க் கொக்கு மிளஞ்சேய்” என்று முருகப்பிரானைப் பாராட்டுமிதனால் அக்கடவுளை இவர் மறப்பினும் இவர்நா மறவாதென்பதை இவர் உணர்ந்துகொள்ளலாம்.

    இம்முனிவர் பிரானுடைய நாமமாகிய குமரகுருபரரென்பது முருகக் கடவுளுக்குரிய திருநாமங்களுள் ஒன்றே. இவர் அப்பெயரால் அக்கடவுளை,