(399)
என்பதில் தெரிவிக்கின்றார். அவ்வடியார் குழுவில் ஒருவராகிய இவர் தம்முடைய முதற்பிரபந்தத்ததிலே செந்திற்பிரான் திருக்கோலத்தைக் கேசாதிபாதமாக வருணித்து உவக்கின்றார். பிறரால் எழுதுதற்கரிய முருகப்பிரான் திருவுருவை அடியர் தம் மனத்திலும் விழியிலுமெழுதுவர்; இவர் அவற்றோடு நில்லாது நாமும் ஓரளவு அனுபவிக்கும்படி தமது செய்யுளில் சித்தரித்து அமைத்து வைத்திருக்கின்றார்.
உமாதேவியாரைப் பற்றிய செய்திகளாக இவர் கூறுவன வருமாறு:-
அவ்வம்மை திருமாலுக்குத் தங்கையென்பது, இறைவன் நடனம் புரியும்போது அம்மை தாளங் கொட்டுவது, சதாசிவ மூர்த்தியின் துடையில் அம்மை வீற்றிருத்தல் (37), அம்மையின் கண்களிலிருந்து கலைமகளும் திருமகளும் உதித்தது (53).