(660)
என்பவற்றிற் குறித்துள்ளார்.
இந்தரன், இந்திராணி, காமன், குபேரன், சத்தமாதர், சூரியன், திருமகள், துர்க்கை, நந்திதேவர், பிரமன், முப்பத்து முக்கோடி தேவர், யமன், வருண்னென்னும், தெய்வங்களைப் பற்றிய செய்திகள் இவர் செய்யுட்களில் விரவிவரும்.
கலைமகள்பால் இவர் பேரன்பு பூண்டவர். சகலகலாவல்லி மாலையெனப் பத்துச் செய்யுட்களாலும், இரண்டு பிள்ளைத் தமிழ்களிலுமுள்ள இரண்டு செய்யுட்களாலும் அப்பிராட்டியை நாவாரத் துதித்துப் புகழ்வதோடு வேறிடங்களிற் சார்த்து வகையானும் அவள் பெருமையை உணர்த்துகின்றார்;