(569)
ஆகிய பிறப்பைத் தரின் திருமால்பதவி முதலியவற்றையும் விரும்பாமல் அதனை ஏற்பதாக்க் கூறுகின்றார்.
இவர் உள்ளத்துறவும் நிராசையும் நிரம்பிய மெய்ஞ்ஞானச் செல்வர்; சிந்தையினிறைவே செல்வமென்றும் அவாவே நல்குரவென்றும் உணர்ந்தவர்; ஆதலின்,
| “அவாவெனப் படுமவ் |
| வறுமையி னின்றும் வாங்கி |
| அறிவின் செல்வ மளித்தரு ளெனக்கே” |
(475)
என நடராசப்பெருமானை வேண்டுகின்றார். இவர் தில்லை வாணரிடத்திற் கேட்கும் வரமொன்றுண்டு; அது வருமாறு:
| “பெருங்குளிர்க் குடைந்த காலைக் கருந்துணி |
| பலதொடுத் திசைத்த வொருதுணி யல்லது |
| பிறிதொன்று கிடையா தாக வறுமனைக் |
| கடைப்புறத் திண்ணை அல்லது கிடக்கைக் |