| உடுக்கும் புவனங் கடந்துநின்ற | | ஒருவன் றிருவுள் ளத்திலழ | | கொழுக வெழுதிப் பார்த்திருக்கும் | | உயிரோ வியமே மதுகரம்வாய் |
| மடுக்குங் குழற்கா டேந்துமிள | | வஞ்சிக் கொடியே வருகவே. | | மலயத் துவசன் பெற்றபெரு | | |
63. | பெருந்தே னிறைக்கு நறைக்கூந்தற் | | பிடியே வருக முழுஞானப் | | பெருக்கே வருக பிறைமௌலிப் | | பெம்மான் முக்கட் சுடர்க்கிடுநல் |
| விருந்தே வருக மும்முதற்கும் | | வித்தே வருக வித்தின்றி | | விளைந்த பரமா னந்தத்தின் | | விளைவே வருக பழமறையின் |
| குருந்தே வருக வருள்பழுத்த | | கொம்பே வருக திருக்கடைக்கண் | | கொழித்த கருணைப் பெருவெள்ளம் | | குடைவார் பிறவிப் பெரும்பிணிக்கோர் |
| மருந்தே வருக பசுங்குதலை | | மழலைக் கிளியே வருகவே | | மலயத் துவசன் பெற்றபெரு | | |
(3) ஒருவன்-சிவபெருமான். உயிரோவியம்: “அத்தன் மனத்தெழுதிய வுயிரோவியம்” (80.) மதுகரம் - வண்டு.
(4) குழலாகிய காடு: 701.
63. (அடி, 1) (பி-ம்.) ‘உறைக்கும்’, இரைக்கும்’.
(1-2) முக்கட் சுடர்க்கிடு விருந்து: 44-8. முக்கண்ணாகிய சுடர். மும்முதல் - பிரமன் முதலிய மும்மூர்த்திகள். (பி-ம்.) ‘விளைக்கும் பரமா னந்தத்தின்.’
(3) குருந்து - குருத்து. (பி-ம்.) ‘அளிபழுத்த.’
(3-4) பிறவிப்பிணிக்கோர் மருந்து: 22.
|