7.அம்புலிப்பருவம்
64. | கண்டுபடு குதலைப் பசுங்கிளி யிவட்கொரு | | கலாபேத மென்னநின்னைக | | கலைமறைகண் முறையிடுவ கண்டோ வலாதொண் | | கலாநிதி யெனத்தெரிந்தோ |
| வண்டுபடு தெரியற் றிருத்தாதை யார்மரபின் | | வழிமுத லெனக்குறித்தோ | | வளர்சடை முடிக்கெந்தை தண்ணுறுங் கண்ணியா | | வைத்தது கடைப்பிடித்தோ |
| குண்டுபடு பாற்கடல் வருந்திருச் சேடியொடு | | கூடப் பிறந்ததோர்ந்தோ | | கோமாட்டி யிவணின்னை வம்மெனக் கொம்மெனக் | | கூவிடப் பெற்றாயுனக் |
| கண்டுபடு சீரிதன் றாதலா லிவளுடன் | | அம்புலீ யாடவாவே | | ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன் | | |
64. அம்பிகை சந்திரனிடம் அன்பு பூணுவதற்குரிய காரணங்கள் சொல்லப்படும்.
(அடி, 1) கண்டு - கற்கண்டு. படு: உவமவுருபு. அம்பிகையுன், சிவபெருமான்ப் போலவே எட்டு உருவங்களை யுடையளாதலின் அவ்வுருவங்களில் சந்திரன் ஒருவனென்பது குறித்து அவனை ஒரு கலாபேதமென்றார். முறையிடுவ - முறையிடுதல். கலாநிதி - கலைகளுக்கு இருப்பிடம், கலை- வித்தை, கிரணம்.
(2) தாதையார் - பாண்டியர். வழிமுதல் - குலமுதல்வன் (71); “செருமாண் டென்னர் குலமுத லாதலின், அந்தி வானத்து வெண்பிறை தோன்றி” (சிலப். 4:22-3.) எந்தை - சிவபெருமான். கண்ணி - தலையிற் சூடும் மாலை; “மாதர்ப் பிறைக்கண்ணி யானை” (தே.)
(3) குண்டு - ஆழம். திருச்சேடி - திருமகளாகிய தோழி. வம்மென - வாவென (72.) கொம்மென - விரைவாக.
(4) அண்டுபடு - பொருந்தும். ஆணிப்பொன் - உரையாணிப் பொன்.
|