பக்கம் எண் :

82குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

65.
குலத்தோடு தெய்வக் குழாம்பிழிந் தூற்றிக்
   குடித்துச் சுவைத்துமிழ்ந்த
கோதென்று மழல்விடங் கொப்புளிக் கின்றவிரு
   கோளினுச் சிட்டமென்றும்

கலைத்தோடு மூடிக் களங்கம் பொதிந்திட்ட
   கயரோகி யென்றுமொருநாள்
கண்கொண்டு பார்க்கவுங் கடவதன் றெனவும்
   கடற்புவி யெடுத்திகழவிட்

புலத்தோடு முடுமீன் கணத்தோடு மோடுநின்
   போல்வார்க்கு மாபாதகம்
போக்குமித் தலமலது புகலில்லை காண்மிசைப்
   பொங்குபுனல் கற்பக்ககா

டலைத்தோடு வைகைத் துறைப்படி மடப்பிடியொ
   டம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியிடன்
   அம்புலீ யாடவாவே.    
(2)

    65. சந்திரனுடைய குறைகள் நீங்குமென்பது கூறப்படும்.

    (அடி, 1)தெய்வக்குழாம் - தேவர்களின் தொகுதி; தேவர்கள் சந்திரகிரணத்தை உண்பரென்றல் மரபு; “பிறைவளர் நிறைமதி யுண்டி, அணிமணிப் பைம்பூ ணமர்ர்க்கு”. “உலகுபயம் பகர வோங்குபெரும் பக்கம், வழியது பக்கத்தமர ருண்டி, மதி” (பரி. 3:52.11:34-6.) கோது - சக்கை. இருகோள் - இராகு கேதுக்கள். உச்சிட்டம் - எச்சில்.

    (2) கலைத்தோடு - கலைத்தொகுதி; ஆடையின் தொகுதியென்பது வேறு பொருள்; கலை: சிலேடை (66.) களங்கம் - சந்திரனித்துள்ள கறுப்பு. கயரோகி - க்ஷயரோகத்தை யுடையவன்; என்றது உடல் தேய்வது கருதிக் கூறியது. ஒரு நாள் - விநாயக சதுர்த்தி; அன்று சந்திரனைப் பார்த்தல் கூடாதென்பர்; “சிங்கமா மதியிடைச் சேர்முன் பக்கத்துத், தங்குநஞ் சதுர்த்தியிற் றன்னைக் காணற்க, மங்குல்வான் முன்புபோன் மற்றை நாளெலாம், அங்கவ னுருவினை யாருங்காண்கவே” (விநாயக. சந்திரன் அனுட்டித்த. 21.)

    (3) ஒருவனுடைய மாபாதகத்தை ஸ்ரீ சோமசுந்தரக் கடவுள் இங்கே போக்கியருளினர்; இதனை மாபாதகம் தீர்த்த திருவிளையாதலால் உணரலாகும். புகல் - அடைக்கலத் தானம்.