66. | கீற்றுமதி யெனநிலவு தோற்றுபரு வத்திலொளி | | கிளர்நுதற் செவ்விவவ்விக் | | கெண்டைத் தடங்கணா ரெருவிட் டிறைஞ்சக் | | கிடந்தது முடைந்தமுதம்விண் |
| டூற்றுபுது வெண்கலை யுடுத்துமுழு மதியென | | உதித்தவம யத்தும்மமை | | ஒண்முகத் தொழுகுதிரு வழகைக் கவர்ந்துகொண் | | டோடினது நிற்கமற்றை |
| மாற்றவ ளொடுங்கேள்வர் மௌலியி லுறைந்ததும் | | மறந்துனை யழைத்தபொழுதே | | மற்றிவள் பெருங்கருணை சொற்றிடக் கடவதோ | | மண்முழுதும் விம்முபுயம்வைத் |
| தாற்றுமுடி யரசுதவு மரசிளங் குமரியுடன் | | அம்புலீ யாடவாவே | | ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன் | | |
67. | விண்டலம் பொலியப் பொலிந்திடுதி யேலுனது | | வெம்பணிப் பகைவிழுங்கி | | விக்கிடக் க்ககிடத் தொக்கிடர்ப் படுதிவெயில் | | விரியுஞ் சுடர்ப்பருதியின |
66. சந்திரனிடத்து அம்பிகைக்குக் கோபம் உண்டாதற்குரிய காரணங்கள் சில கூறப்படும். (அடி, 1) கீற்றுமது - பிறை. ஸஸ்யாதிபதியென்று மதி கூறப்படுமாதலின் அவனை எருவிட்டிறைஞ்சுதல் மரபென்பர் (189.) (2) கலை - கிரணம், ஆடை; சிலேடை. (3) மாற்றவள் - கங்கை. (4) ஆற்று - தாங்கும். முடியரசு - மலையத்துவச பாண்டியன். 67. சந்திரன் அடையும் துன்பங்கள் சில கூறப்படும். (அடி, 1-2) வெம்பணிப்பகை - வெவ்விய பாம்புகளாகிய பகை; இராகு கேதுக்கள் (65,) தொக்கு - சேர்ந்து. அமாவாசையில் சூரியனும் சந்திரனும் சேர்தலை நினைந்து, சூரிய மண்டலம் புக்க காலையில் ஒளி மழுங்கு மென்றார்; “இந்துவோ டிரவி கூட்ட மமாவாசை” (சூடா. தெய்வப்.) எந்தை - சிவபெருமான். மாசுணம் - அவர் திருமுடியிலணிந்த பாம்பு.
|