பக்கம் எண் :

84குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

மண்டலம் புக்கனை யிருத்தியெனி னொள்ளொளி
   மழுங்கிட வழுங்கிடுதிபொன்
வளர்சடைக் காட்டெந்தை வைத்திடப் பெறுதியேல்
   மாசுணஞ் சுற்றவச்சம்

கொண்டுகண் டுஞ்சா திருப்பது மருப்பொங்கு
   கோதையிவள் சீறடிகணின்    
குடர்குழம் பிடவே கூமைப்பதும் பெறுதியெங்
   கோமாட்டி பாலடைந்தால்

அண்டபகி ரண்டமு மகண்டமும் பெறுதியால்
   அம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன்
   அம்புலீ யாடவாவே.    
(4)

68.
எண்ணில்பல புவனப் பெருந்தட்டை யூடுருவி
   இவள் பெரும் புகழ்நெடுநிலா
எங்கணு நிறைந்திடுவ தங்கதனின் மெள்ளநீ
   எள்ளளவு மொண்டுகொண்டு

வெண்ணிலவு பொழிவது கிடைத்தனை மடுத்திவள்
   விழிக்கடை கொழித்தகருணை
வெள்ளந் திளைத்தாடு பெற்றியாற் றண்ணளி
   விளைப்படும் பெற்றனைகொலாம்

மண்ணிலொண் பைங்கூழ் வளர்ப்பது னிடத்தம்மை
   வைத்திடுஞ் சக்தியேகாண்
மற்றொரு சுதந்தர நினக்கென விலைக்கலை
   மதிக்கடவு ணீயுமுணர்வாய்

    (3) குமைப்பது - உதைப்பது; இஃது ஊடற்கட் செயல். துஞ்சா திருப்பதும் குமைப்பதும் பெறுதி.

    (4) அண்டமும் பகிரண்டமுமாகிய அகண்டமும்; அகண்டம் - முழுவதும்.

    68. (அடி, 1) தட்டு - அடுக்கு.

    (3) பைங்கூழ் - பசிய பயிர். சந்திரன் ஸஸ்யாதிபதியாதலின் பைங்கூழை வளர்ப்பதாகக் கூறினார் (71.)