பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்85

   அண்ணலங் களியானை யரசர்கோ மகளுடன்
   அம்புலீ யாடவாவே.
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன்
   அம்புலீ யாடவாவே.    
(5)

69.
முன்பும்ப ரரசுசெய் பெரும்பாவ முங்கோவ
   மூரிமாத் தொடர்சாவமும
மும்மைத் தமிழ்ச்செழியன் வெப்பொடு கொடுங்கூனும்
   மோசித்த வித்தலத்தின்

தன்பெருந் தன்மையை யுணர்ந்திலைகொல் சிவராச
   தானியாய்ச் சீவன்முத்தித்
தலமுமாய்த் துவாதசாந் தத்தலமு மானதித்
   தலமித் தலத்தடைதியேல்    

மன்பெருங் குரவற் பிழைத்தபா வமுமற்றை
   மாமடிக ளிடுசாவமும்
வளரிளம் பருவத்து நரைதிரையு முதிர்கூனும்
   மாற்றிடப் பெறுதிகண்டாய்

அன்பரென் புருகக் கசிந்திடு பசுந்தேனோ
   டம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன்
   அம்புலீ யாடவாவே.    
(6)

    69. மதுரையின் சிறப்பும் அதனை அடைந்தால் சந்திரன் அடையும் பேறுகளும் கூறப்படும்.

    (அடி, 1) உம்பர் அரசு - இந்திரன். (பி-ம்.) ‘முன்பெரும் பாவி செய்’. மூரிமா - வலியையுடைய யானையாகிய ஐராவதம். சாவம் - சாபம்: (பி-ம்.) ‘சாபமும்’. மும்மைத் தமிழ் - முத்தமிழ். செழியன் - கூன்பாண்டின். வெப்பு - கரம். மோசித்த - நீக்கிய (1 : 120.)

    (2) சிவராசதானி: “சீர்கொண்ட கூடற் சிவராச தானி”, “திருமதுரை, தானே சிவராச தானி” (தமிழ்விடு. 1265-6.) சீவன் முத்தித்தலம், துவாதசாந்தத்தலம்: திருவிளை. தலவிசேடப். 21.

    (3) குரவன் - பிருகஸ்பதி. மாமடிகள் - மாமனார் (547.) தக்கன் இடு சாபம்: சந்திரன் உரோகிணியிடத்து மிக்க விருப்புடையவமாகியிருந்து மற்ற மனைவியரைப் புறக்கணித்தமையின், கலை குறைகவென்று தக்கன் சாபமிட்டானென்பது வரலாறு (கந்த. சந்திரசாப்ப்.)

    (4) அன்பர் என்புருகக் கசிந்திடுதேன்: 76.