பக்கம் எண் :

86குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

70.
கும்பஞ் சுமந்தமத வெள்ளநீர் கொட்டும்
   கொடுங்களி றிடும்போர்வையான்
குடிலகோ டீரத் திருந்துகொண் தந்நலார்
   கொய்தளிர்க் கைவருடவும்

செம்பஞ் சுறுத்தவும் பதைபதைத் தாரழற்
   சிகையவனக் கொப்புளிக்கும்
சீறடிகள் கன்றிச் சிவந்திடச் செய்வதும்
   திருவுளத் தடையாதுபொற்

றம்பஞ் சுமந்தீன்ற மானிட விலங்கின்
   தனிப்புதல்வ னுக்குவட்டத்
தண்குடை நிழற்றுநினை வம்மென வழைத்தனள்  
   தழைத்திடு கழைக்கரும் பொன்

றம்பஞ் சுடன்கொண்ட மகரக் கொடிக்கொடியொ
   டம்புலீ யாடவாவே.
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன்
   அம்புலீ யாடவாவே.    
(7)

71.
துளிதூங்கு தெள்ளமுத வெள்ளருவி பொழியுநின்
   தொன்மரபு தழையவந்து
தோன்றிடுங் கௌரியர் குலக்கொழுந் தைக்கண்டு
   துணைவிழியு மனமுநின்று

    70. அம்பிகை சந்திரன்பாற் சினங்கொள்ளுதற்குரிய ஏதுக்கள் இருப்பவும் அவள் அவற்றை மறந்து அழைத்ததனளென்ற செய்தி சொல்லப்படும்.

    (அடி, 1) போர்வையான் - சிவபிரான். குடில கோடீரம் - வட்டமான சடை.

    (1-2) அந்தலார் - தேவியின் தோழிகள், இருந்துகொண்டு செய்வதும் என்க. அடையாது - கொள்ளாமல்.

    (3) மானிட விலங்கு - நரசிங்கம். புதல்வன் - காமன்.

    (3-4) கரும்புவில்லும் பஞ்சபாணமும் அம்பிகைக்கு உரியன (75.)

    71. சந்திரனுடைய இழிவு கூறப்படும்.

    (அடி, 1) கௌரியர் - பாண்டியருடைய: குலக்கொழுந்து - அம்பிகை.