பக்கம் எண் :

88குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

தழைக்குந் துகிற்கொடி முகிற்கொடி திரைத்துமேற்
   றலம்வளர் நகிற்கொடிகளைத்
தாழ்குழலு நீவிநுதல் வெயர்வுந் துடைத்தம்மை
   சமயமிது வென்றளுவளிட்

டழைக்குந் தடம்புரிசை மதுரைத் துரைப்பெணுடன்
   அம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன்
   அம்புலீ யாடவாவே.    
(9)

73.
ஏடகத் தெழுதாத வேதச் சிரத்தர
   சிருக்குமிவள் சீறடிகணின்
இதயத் தடத்தும் பொலிந்தவா திருவுளத்
   தெண்ணியன் றேகபடமா

நாடகத் தைந்தொழி னடத்தும் பிரான்றெய்வ
   நதியொடு முடித்தல்பெற்றாய்
நங்கையிவ டிருவுள மகிழ்ச்சிபெறி னிதுபோலொர்
   நற்றவப் பேறில்லைகாண்

    (3) துகிற்கொடி எழுவாய். முகிற்கொடி - மேகத்தின் ஒழுங்கினை. திரைத்து - சுருட்டி. மேற்றலம் - விண்ணுலகம். நகிற் கொடிகள் - தெய்வ மகளிர். அம்மை சமயம் - அம்பிகை தரிசனம் அளித்தற்குரிய செவ்வி. அலுவலிட்டு - வேலையில் ஏவி.

    (4) துரைப் பெண்: 29.

    73. (அடி, 1) வேதச்சிரம் - உபநிடதம். சந்திரனிடத்து அம்பிகை எழுந்தருளியிருப்பதாக நூல்கள் கூறும்; “மதி மண்டலத் தமுத மாயம்மை தோன்றுகின்றதும்” (95); ‘சந்திர மண்டல மத்யகா’ என்பது லலிதா ஸஹஸ்ரநாமம் (240.)

    (1-2) கபடமா நாடகத்து ஐந்தொழில் நடத்தும் பிரான் - புறத்தார்க்குப் புலப்படாத உட்கருத்தையுடைய தன் நடனத்தில் ஆக்கல் முதலிய ஐந்தொழிலையும் புரியும் பெருமான்; நாடகம் - கூத்தென்னும் துணையாய் நின்றது. சிவபிரானது திருநடனக்கோலம் ஐந்தொழிலையும் நடத்துதற்குரிய அடையாளமாக நிலவுவதென்பது உண்மை விளக்கம் முதலிய நூல்களால் அறியப்படும். (பி-ம்.) ‘ஐந்தொழி னடிக்கும்பிரான்’.