| மாடகக் கடைதிருத் தின்னரம் பார்த்துகிர் | | வடிம்புதை வருமந்நலார் | | மகரயாழ், மழலைக்கு மரவங்க ணுண்டுகில் | | வழங்கக் கொழுங்கோங்குதூங் |
| காடகப் பொற்கிழி யவிழ்க்குமது ரைத்திருவொ | | டம்புலீ யாடவாவே. | | ஆணிப்பொன் வில்லிபுசர் மாணிக்க வல்லியுடன் | | |
8. அம்மானைப் பருவம்
74. | கரைக்குங் கடாமிரு கவுட்குட முடைந்தூற்று | | களிறுபெரு வயிறுதூர்ப்பக் | | கவளந் திரட்டிக் கொடுப்பதென வுஞ்சூழ்ந்தொர் | | கலைமதிக் கலசவமுதுக் |
| கிரைக்கும் பெருந்தேவர் புன்கண் டுடைத்திட | | எடுத்தமுத கலசம்வெவ்வே | | றீந்திடுவ தெனவுமுழு முத்திட் டிழைத்திட்ட | | எறிபந்தி னிரையென்னவும் |
(3) மாடகம் - முறுக்காணி. திரித்து - முறுக்கி. உகிர் - நகம். யாழ். மழலைக்கு. யாழ்ப்பாட்டாகிய மழலைக்கு. மரவம் - வெண்கடம்பு; அதன் மலர் துகில் போல்வது (சீவக. 1558.)
(3-4) கோங்கின் மலருக்குப் பொன் உவமை. ஆடகப் பொற்கிழி - பொன்முடிப்பு.
74. (அடி, 1) கரைக்கும் - ஒழுகவிடும். கவளாகிய குடம்; கவுள் - கன்னம். (பி-ம்.) ‘உடைத்தூற்றும்.’ களிறு: விநாயகர். தூர்ப்ப - நிறைப்ப. மதியாகிய கலசம்.
(2) இரைக்கும் - மோகமுறும் (தக்க. 129, உரை) புன்கண் - துன்பத்தை. ஒரு கலசத்தை விரும்புபவர்களுக்கு வெவ்வேறு கலசம் ஈந்திடுவதென்பது ஒரு நயம். பந்தின் நிரை - பந்தின் வரிசை.
|