| விரைக்குந் தளிர்க்கை கொழுந்தா மரைத்துஞ்சி | | மீதெழுந் தார்த்தபிள்ளை | | வெள்ளோ திமத்திரளி தெனவுங் கரும்பாறை | | மீமிசைச் செஞ்சாந்துவைத் |
| தரைக்குந் திரைக்கைவெள் ளருவிவை கைத்துறைவி | | அம்மானை யாடியருளே | | ஆகங் கலந்தொருவர் பாகம் பகுந்தபெண் | | |
75. | திங்கட் கொழுந்தைக் கொழுந்துபடு படர்சடைச் | | செருகுதிரு மணவாளன்மேற் | | செழுமணப் பந்தரி லெடுத்தெறியு மமுதவெண் | | திரளையிற் புரளுமறுகாற் |
| பைங்கட் கரும்பென விசும்பிற் படர்ந்தெழும் | | பனிமதி மிசைத்தாவிடும் | | பருவமட மானெனவெ னம்மனைநி னம்மனைப் | | படைவிழிக் கயல்பாய்ந்தெழ |
| வெங்கட் கடுங்கொலைய வேழக்கு ழாமிதென | | மேகக் குழாத்தைமுட்டி | | விளையாடு மழகளிறு கடைவாய் குதட்டமுகை | | விண்டவம் பைந்துகோத்த |
(3) விரைக்கும் - மணம் வீசும். கையாகிய தாமரைமலரில், துஞ்சி. ஓதிமத்திரள் - அன்னத்தின் தொகுதி. அம்பிகை அன்னத்தை வளர்த்தல்: 83.
(1-3) அம்மானைக்குச் சோற்றுருண்டையும் அமுதகலசமும் முத்துப் பந்தும் அன்னமும் உவமைகள்.
(4) திரைக்கை - அலையாகிய கை. அருவியென்றது இங்கே நீரோட்டத்தை. (பி-ம்.) ‘பாகம் புகுந்த’; ‘பாகம் பகிர்ந்த’.
75. (அடி, 1-2) அம்பிகை அம்மான் விளையாடும்போது அவ்வம்மானைகளின்மேல் திருவிழிகள்பாய்தலிக்குச் சில உவமைகள் கூறப்படும்.
அமுதவெண்டிரளை - சோற்றுருண்டை. (பி-ம்.) ‘படர்ந்த வெண் பனிமதி’. அம்மனை - தாய், அம்மானை. அம்மானைக்குச் சோற்றுருண்டையும் மதியும், அதிற் பாய்கின்ற அம்பிகையின் திருவிழிக்கு வண்டும் மானும் உவமைகள்.
(3)மேகக்குழாத்தை யானைக்கூட்டமென்றெண்ணி. இது - தொகுதியொருமை. மழகளிறு - விநாயகக் கடவுள்.
|