| அங்கட் கரும்பேந்து மபிடேக வல்லிதிரு | | அம்மானை யாடியருளே | | ஆகங் கலந்தொருவர் பாகம் பகுந்தபெண் | | |
76. | கள்ளூறு கஞ்சக் கரத்தூறு சேயொளி | | கலப்பச் சிவப்பூறியும் | | கருணைப் பெருக்கூற வமுதூறு பார்வைக் | | கடைக்கடை கறுப்பூறியும் |
| நள்ளூறு மறுவூ றகற்றுமுக மதியில்வெண் | | ணகையூறு நிலவூறியும் | | நற்றரள வம்மனையொர் சிற்குணத் தினைமூன்று | | நற்குணங் கதுவல்காட்ட |
| உள்ளூறு களிதுளும் பக்குரவ ரிருவீரும் | | உற்றிடு துவாதசாந்தத் | | தொருபெரு வெளிக்கே விழித்துறங் குந்தொண்டர் | | உழுவலன் பென்புருகநெக் |
| கள்ளூற வுள்ளே கசிந்தூறு பைந்தேறல் | | அம்மானை யாடியருளே | | ஆகங் கலந்தொருவர் பாகம் பகுந்தபெண் | | |
(3-4) அம்பு ஐந்தும் கருப்புவில்லும் அம்பிகைக்கு உரியன. அக்கரும்பைக் கண்டு விநாயகர் வாய் குதட்ட. குதட்ட ஏந்தும் என்க.
76. அம்பிகையின் கரம், கண், நகை என்பவற்றால் அம்மானையின் நிறம் வேறுபடுதல் கூறப்படும்.
(அடி, 1-2) பார்வைக்கடைக்கண் கறுப்பு - பார்வையையுடைய கடைக்கண்ணின் கறுப்பு. நள் ஊறு - நடுவிலே அமைத. மறுவாகிய ஊறு. சிற்குணம் - சித்தினது குணம்; சித்து - ஆன்மா. மூன்று நற்குணம் - சத்துவ ராஜஸ தாமஸ குணங்கள். அம்மானை பலநிறம் தோய்தல்: 82.
(3) விழித்துறங்கும் தொண்டர்: “விழித்துறங்கும், உபாயந்தெரிவீர்” (பாசவதைப். 29); “விழித்த கண்குரு டாத்திரி வீரரும் பலரால்” (திருவிளை. 58 : 38.)
(3-4) தொண்டர் என்புருக ஊறு தேறல்: 69.
|