| பெயரா திருந்துவிளை யாடுவது கண்டெந்தை | | பிறைமுடி துளக்கமுடமேற் | | பெருகுசுர கங்கைநுரை பொங்கலம் மானையப் | | பெண்கொடியு மாடன்மான |
| வெயரா மனம்புழுங் கிடு்மரர் தச்சனும் | | வியப்பச் செயுந்தவளமா | | மேடையுந் தண்டரள மாடமுந் தெண்ணிலா | | வீசத் திசைக்களிறெலாம் |
| அயிரா பதத்தினை நிகர்க்குமது ரைத்தலைவி | | அம்மானை யாடியருளே | | ஆகங் கலந்தொருவர் பாகம் பகுந்தபெண் | | |
வேறு 80. | முத்தம ழுத்திய வம்மனை கைம்மலர் | | முளரிம ணங்கமழ | | மொய்குழல் வண்டுநின் மைவிழி வண்டின் | | முயங்கி மயங்கியிடக் |
| கொத்து மணித்திர ளிற்செயு மம்மனை | | குயிலின்மி ழற்றியநின் | | குழலினி சைக்குரு கிப்பனி தூங்கு | | குறுந்துளி சிந்தியிட |
(2) எந்தை - சிவபிரான். துளக்க - அசைக்க. சிவபெருமான் முடி துளக்கியதால் அவர் சிரத்தின்மேலுள்ள கங்கையில் நுரை பொங்கியது; அந்நுரை அம்மான் போலத் தோற்றுதலின் கங்கையும் அம்மனையாடும் தோற்றத்தை அளித்தது. அப்பெண் கொடி - கங்கை. (பி-ம்.) ‘பொங்குவ தம்மனையையப்பெண்.’ (3) தவளம் - வெண்மை.
80. முத்து, மாணிக்கம், பவளம் என்பவற்றால் இயற்றிய அம்மனைகளை அம்பிகை ஆடுதல் கூறப்படும்.
(அடி, 1) கையிலிருந்து சென்ற அம்மானை தாமரையின் மணத்தை வீச அதன்மேல் அந்தமணம் பற்றி வண்டு மொய்த்தது. அம்பிகையின் திருக்கரம் தாமரையின் நறுமணத்தை யுடையதென்றபடி. மைவிழி வண்டின் - கரிய விழியாகிய வண்டைப்போல்; கண்கள் அம்மனையை நோக்கினவாதலின் இங்ஙனம் கூறினார்.
(2) மணி - மாணிக்கம். குழலினிசை - வேய்ங்குழல் போன்ற இசை அம்மனையாடுவார் அதற்குரிய இசைப்பாட்டுப் பாடுவார்; “கருந்தடங்
|