| வித்துரு மத்திலி ழைத்தவு நின்கை | | விரற்பவ ளத்தளிரின் | | விளைதரு மொள்ளொளி திருடப் போவது | | மீள்வது மாய்த்திரிய |
| அத்தன் மனத்தெழு தியவுயி ரோவியம் | | ஆடுக வம்மனையே | | அழகு தழைந்தகல் யாண சவுந்தரி | | |
81. | விளரிமி ழற்றளி குமுறுகு ழற்கொடி | | வீசிய வம்மனைபோய் | | விண்ணி னிரைத்தெழு வதுக்க னந்திரு | | மேனிய தானவருக் |
| கிளநில வுமிழ்பரு முத்தின் கோவை | | யெடுத்தவர் திருமார்புக் | | கிடுவ கடுப்பவு மப்பரி சேபல | | மணியி னியற்றியிடும் |
கண்ணார்கழல்பந் தம்மான்ப் பாட்டயருங் கழுமலமே” (தே. திருஞா.) அம்பிகை பாடும் பாட்டுக்கு மாணிக்கப் பந்து உருகியதென்றபடி. இசைக்குக் கல்லுருகு மென்பதுபற்றி இச்செய்தியை யமைத்தார்; “வாழொப்பிலாதவன் சேயொப்பிலாத மழவதிரை, ஆழிக் கடல்விட்டு நீபாடுங் காலத்தரி செலுங்கால், நீழற் கவுத்துவ நீத்துச்செல் வானந்த நீண்மணி. தான், காழொப் பினுநின் னிசைகேட்குங் காற்கரைந் தேகுமென்றே” (தமிழ் நா.); “சுருக்கா விசையின் மணிகரைந்து சோர்ந்து, திருக்கா தரவுகனந் தீர” (திருக்கழுக்குன்றத்து உலா, 102.)
(3) வித்துருமம் - பவளம்.(பி-ம்.) ‘போயது மீள்வது மாய்த்’. (4) உயிரோவியம்: 62.
81. அம்பிகை முத்தினாலும் பலநிறமணிகளாலும் செய்த அம்மனைகளை ஆடுதல் கூறப்படும்.
(அடி, 1) விளரி - ஒரு பண். குமுறுதல் - ஒலித்தல். கொடியாகிய நீ. வீசிய அம்மனை யென்றது இங்கே முத்தினாலாகிய அம்மனைகளை. நிரைத்தெழுவது - வரிசையாகி எழுதல். (பி-ம்.) ‘விண்ணினிரைத்திடுவது’. ககனம் திருமேனியதானவர் - ஆகாசமே திருமேனியாக உள்ள சிவபெருமான்; அது: பகுதிப் பொருள் விகுதி (83); “வேத மொழிவிசும்பு மேனி” (திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், 2.)
|