பக்கம் எண் :

96குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

வளரொளி விம்மிய வம்மனை செல்வது
   வானவிலொத் திடவும்
மனனெக் குருகப் பரமா னந்த
   மடுத்த திருத்தொண்டர்க்

களிகனி யத்திரு வருள்கனி யுங்கனி
   ஆடுக வம்மனையே
அழகு தழைந்தகல் யாண சவுந்தரி
   ஆடுக வம்மனையே.    
(8)

82. 
கைம்மல ரிற்கொலி கதிர்முத் தம்மனை
   நகைமுத் தொளிதோயக்
கண்டவர் நிற்கப் பிறர்சிலர் செங்கைக்
   கமலச் சுடர்கதுவச்

செம்மணி யிற்செய் திழைத்தன வெனவும்
   சிற்சிலர் கட்கடையின்
செவ்வியை வவ்விய பின்கரு மணியிற்
   செய்தென கொல்லெனவும்

தம்மன மொப்ப வுரைப்பன மற்றைச்    
   சமயத் தமைவுபெறார்
தத்தமி னின்று பிதற்றுவ பொருவத்
   தனிமுதல் யாமென்பார்க்    

    (2-3) பலமணி - பல நிறமணிகள். பல நிறமணிகளாலாகிய அம்மனைகள் மேலே செல்கையில் வானவில்லின் தோற்றத்தை உண்டாக்கின.

    (4) அம்பிகையைக் கனியென்றல்: 113.

    82. அம்பிகை முத்தாலாகிய அம்மனையாடும்போது அவள் நகை, கை, கண் ஆகியவற்றின் ஒளி தோய்க்யில் அது நிறமாறிக் காட்டுதலால் பிறருக்கு உண்டாகும் மயக்கம் கூறப்படும்.

    (அடி, 1) நகையாகிய முத்தின் ஒளியை. நிற்க - ஒன்றும் கூறாமல் நிற்ப.

    (1-3) கையின் செந்நிறம் பாய்ந்து சிவப்பாகத் தோற்றக் கண்டார் அவ்வம்மனைகள் மாணிக்கத்தாற் செய்யப்பட்டனவெனவும், கண்ணின் கருநிறம் பாய்ந்து கரியனவாகத் தோற்றக் கண்டார் நீலமணியாலாயின வெனவும் கூறினர். அங்ஙனம் கூறுவார் கூற்றுக்கள் புறச்சமயத்திலுள்ளார் தத்தம் சமயக் கொள்கைகளே சிறந்தனவென்று கூறுவதை ஒத்தன; “தந்தங்கருத்துக் கமைந்தபடி சாற்றிச் சாற்றி முழுமாயச் சலதி மூழ்கித் தடுமாறுச் சமயத்தவர்போற் றலைமயங்கும்” (405); “சமய வாதிக டத்த மதங்களே, அமைவ தாக வரற்றி மலைந்தனர்” (திருவா.)