முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
7. பெரியநாயகியம்மை கலித்துறை
பண்டகு வீணை யொடுபாட வந்தவப் பாமடந்தை
கண்டழு மாறு மதிநிரை போலக் கவின்கனியும்
வெண்டலை மாலை கிடந்தொளிர் தோளிக்கு வீங்குமுலைப்
பெண்டகை மாமணி நீகுன்றை வாழும் பெரியம்மையே.
(19)

19. பாமடந்தை-கலைமகள். மதிநிரை-திங்களின் வரிசை. தோளி-வினைக்குறிப்புப் பெயர். அழுமாறு கங்கணவர்தலையும் இவ்வாறாங்கொலென்னும் ஏக்கத்தா லென்க.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்