8. நன்னெறி |
|
|
தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோ மென்று தலையா யவர்செருக்குச் சார்தல்-இலையால் இரைக்கும்வண் டூதுமல ரீர்ங்கோ தாய் மேரு வரைக்கும்வந் தன்று வளைவு.
|
(14) |
|
|
எந்தைநல் கூர்ந்தா னிரப்பார்க்கீந் தென்றவன் மைந்தர்தம் மீகை மறுப்பரோ பைந்தொடீ நின்று பயனுதவி நில்லா வரம்பையின்கீழ்க் கன்று முதவுங் கனி.
|
(17) |
|
|
இன்சொலா லன்றி யிருநீர் வியனுலகம் வன்சொலா லென்று மகிழாதே-பொன்செய் அதிர்வளையாய் பொங்கா தழற்கதிராற் றண்ணென் கதிர்வரவாற் பொங்குங் கடல்.
|
(18) |
|
|
நல்லோர் வரவா னகைமுகங்கொண் டின்புறீஇ அல்லோர் வரவா னழுங்குவார்-வல்லோர் திருந்துந் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா வருந்துஞ் சுழல்கால் வர.
|
(19) |
|
|
பெரியவர்தந் நோய்போற் பிறர்நோய்கண் டுள்ளம் எரியி னிழுதாவ ரென்க-தெரியிழாய் மண்டு பிணியால் வருந்தும் பிறவுறுப்பைக் கண்டு கலுழுமே கண்.
|
(20) |
|
|
எழுத்தறியார் கல்விப் பெருக்க மனைத்தும் எழுத்தறிவார்க் காணி னிலையாம்-எழுத்தறிவார் ஆயுங் கடவு ளவிர்சடைமுன் கண்டளவில் வீயுஞ் சுரநீர் மிகை.
|
(21) |
|
|
|
14. தொலையா-அழியாத. தலையாயவர்-நல்லியல்புடைய சான்றோர்கள். செருக்கு-ஆணவ முனைப்பு; அதைக் கர்வம் என்பர். இரைக்கும்-ஒலிக்கும். கோதை-இங்குப் பூமாலை; ஈர்ங்கோதை என்பது குளிர்ந்த பூமாலை. 17. நல்கூர்ந்தான்-வறுமையடைந்தான். அரம்பை-வாழை. ஈகை-கொடுத்தல். தொடி, தொடுக்கப்படுவது தொடி; அஃதிங்கு வளையல். அஃது அன்மொழித்தொகையாய் வளையலையணிந்த பெண்ணையுணர்த்தி நின்றது. 18. வியனுலகம்-பரந்த உலகம். தழற்கதிர்-கதிரவன்ஒளி. தண்ணென்கதிர்-நிலவுக்கதிர். இரு-பெரிய. உலகம்-இங்கே உலகத்திலுள்ளவர்களை. கதிர்-நிலா. 19. அல்லோர்-தீயோர். அழுங்குவார்-வருந்துவார்கள். சுழல்கால்-சூறைக்காற்று. உறீஇ-அடைந்து; சொல்லிசையளபெடை. 20. இழுது-வெண்ணெய். மண்டு-நெருங்கிய. கலுழும்-வருந்தும். 21. எழுத்து-இலக்கணம். சுரநீர்மிகை-விண்ணகக் கங்கையின் பெருக்கு. வீயும்-ஒழியும்.
|
|
|
|